FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, August 8, 2015

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அடையாள அட்டை

07.08.2015
அரசு பேருந்துகளில் பயண சலுகை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும்' என, மாநில ஆணையரிடம் மாற்றுத்திறனாளி நல சங்கம் மனு அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள்மாற்றுத்திறனாளிகள், அரசு சலுகை பெற தேசிய அடையாள அட்டை அவசியம். இத்துடன், மூன்று மருத்துவர் கையொப்பமிட்ட பாஸ் புத்தகமும் வாங்க வேண்டும். அந்த புத்தகத்தின் நகலை காண்பித்து, மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயண சலுகை பெற்றனர்.
ஆனால், சென்னை மாற்றுத்திறனாளி ஆணையரகம் மற்றும் சில மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்களில், ஒரு படிவத்தில், ஒரு மருத்துவர் மட்டும் கையெழுத்திட்டு அளிக்கும் மாற்றுத்திறனாளி சான்று தனியாகவும், நீல நிற பாஸ் புத்தகம் தனியாகவும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில், நீல நிற பாஸ் புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிதாக அளித்த சான்று நகலை காட்டி, மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் பயண சலுகை பெறுவதில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது. பேருந்து நடத்துனர்களுக்கு புதிய சான்று பற்றிய விழிப்புணர்வு இல்லை; அந்த சான்றை ஏற்க நடத்துனர்கள் மறுக்கின்றனர். கடந்த காலம் போல், மூன்று மருத்துவர் கையெழுத்து போட்ட பாஸ் புத்தக நகலை கேட்கின்றனர்.
குழப்பத்தை தீர்க்க...இந்த குழப்பத்தை தீர்க்க, புதிய அடையாள சான்றையும் ஏற்கும் வகையில் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் நம்புராஜன் கூறுகையில், ''இந்த குழப்பத்தை தீர்க்க, எல்லா மாவட்டங்களிலும், ஒரே மாதிரியான அடையாள சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு மனு அளித்துள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment