FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, August 14, 2015

7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மகனுக்கு பரிசளிக்க... ஜூவிலிருந்து பபூன் குரங்கை திருடிச் சென்ற பாசக்கார அம்மா!

ஸ்கோப்ஜே, மாசிடோனியா: காதுகேளாத தனது ஏழு வயது மகனின் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதற்காக, அவனுக்குப் பிடித்த பபூன் குரங்கை மிருகக்காட்சி சாலையில் இருந்து திருடிச் சென்ற அம்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது மாசிடோனியா நாடு. இந்நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜேயில் உள்ள மிருகக்காட்சி சாலையில் லூகா என்ற பதினெட்டு மாதமான பபூன் குரங்கு ஒன்று உள்ளது. தனது குறும்புத்தனமான செயல்களால் பார்வையாளர்களைக் கவரும் லூகாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், கடந்த திங்களன்று மிருகக்காட்சி சாலையின் இரும்பு வலைகளை உடைத்து லூகாவை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஊழிகர்கள் ஆய்வு செய்த போது, ஒரு பெண் லூகாவைத் தனது கைப்பையில் திணித்து மறைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அவர்கள் நடத்திய விசாரணையில், லூகாவைத் திருடிச் சென்ற பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அந்தப் பெண் தனது 7 வயது மகனுடன் அடிக்கடி மிருகக்காட்சி சாலைக்கு வந்ததும், லூகாவின் குறும்பை ரசித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்து சுமார் 50 மைல் தூரத்தில் வசித்துவந்த அந்தப் பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் லூகாவையும் மீட்டு மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், ‘தங்களது 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மகன், லூகாவை அதிகம் ரசித்ததாகவும், எனவே, அவனது பிறந்தநாளுக்குப் பரிசளிக்க அதனைத் திருடிச் சென்றதாகவும்' தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment