FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, August 17, 2015

கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் மறியல்: மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து சென்றது போலீஸ்

16.08.2015, மதுரை: மதுரையில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி மதுரை காளவாசலில் உண்ணாவிரதத்தை துவக்கினர். அடுத்த நாள் உண்ணாவிரத பந்தலை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். எனினும் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். 3ம் நாளான நேற்று முன்தினம் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு இறங்க மறுத்தவர்களை டும் வாக்குவாதத்திற்கு பின்னர் வளாகத்தில் இறக்கி விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே சிலர் தத்தனேரிக்கு சென்று, சுடுகாட்டில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

4வது நாளாக நேற்றும் மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்தனர். போலீசார் வந்து பேசியும் மறியலை கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். சிலர் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அவரது முகத்தில் பீய்ச்சி அடித்து, மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர். திடீரென போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரையும் வலுக்கட்டாயமாக சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டதால், பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். போலீசார் விடாமல் இழுத்து சென்று, அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment