FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, August 17, 2015

கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் மறியல்: மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து சென்றது போலீஸ்

16.08.2015, மதுரை: மதுரையில் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி மதுரை காளவாசலில் உண்ணாவிரதத்தை துவக்கினர். அடுத்த நாள் உண்ணாவிரத பந்தலை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர். எனினும் கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். 3ம் நாளான நேற்று முன்தினம் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு இறங்க மறுத்தவர்களை டும் வாக்குவாதத்திற்கு பின்னர் வளாகத்தில் இறக்கி விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே சிலர் தத்தனேரிக்கு சென்று, சுடுகாட்டில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

4வது நாளாக நேற்றும் மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்தனர். போலீசார் வந்து பேசியும் மறியலை கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். சிலர் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, அவரது முகத்தில் பீய்ச்சி அடித்து, மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர். திடீரென போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோரையும் வலுக்கட்டாயமாக சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டதால், பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். போலீசார் விடாமல் இழுத்து சென்று, அனைவரையும் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment