FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, October 1, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

01.10.2015, சிவகங்கை: 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தையல் தெரிந்த இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடைய நபர்கள் மற்றும் வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் புரிய <உதவும் வகையில் விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்காணும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வரை. அரசு அரசு உதவி பெறும் நிறுவனங்களில் சான்று அல்லது தனியார் நிறுவனங்களில் தையல் தெரியும் என சான்று பெற்றிருக்க வேண்டும்.பிற துறையில் தையல் இயந்திரம் பெற்றிருக்க கூடாது. மேற் காணும் தகுதியுடைய இத்திட்டத்தில் இது வரை பயன்பெறாத சுயதொழில் புரியவிருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை சந்திக்கலாம்.

No comments:

Post a Comment