FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, October 1, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

01.10.2015, சிவகங்கை: 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தையல் தெரிந்த இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடைய நபர்கள் மற்றும் வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் புரிய <உதவும் வகையில் விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்காணும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வரை. அரசு அரசு உதவி பெறும் நிறுவனங்களில் சான்று அல்லது தனியார் நிறுவனங்களில் தையல் தெரியும் என சான்று பெற்றிருக்க வேண்டும்.பிற துறையில் தையல் இயந்திரம் பெற்றிருக்க கூடாது. மேற் காணும் தகுதியுடைய இத்திட்டத்தில் இது வரை பயன்பெறாத சுயதொழில் புரியவிருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை சந்திக்கலாம்.

No comments:

Post a Comment