FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 7, 2025

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!


02.04.2025, கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக ஐந்து பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை.

கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியை அங்கு இருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள சித்தரசாவடி ராஜவாய்க்கால் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் பெண்ணை தொண்டாமுத்தூர் சாலையில் இறக்கி விட்டு சென்று உள்ளனர். அந்த பகுதியில் அழுது கொண்டு இருந்த பெண்ணை தோட்டத்தில் இருந்த முதியவர் பார்த்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.

பின்னர் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து விசாரித்ததில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து தற்போது தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து தனியார் தங்கும் விடுதியில் வைத்து தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment