FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, April 10, 2025

சைகை பாஷை மட்டுமே அதிகம் பேசும் ஒரு கிராமம்: பயத்துடன் பிரசவத்தை எதிர்கொள்ளும் மக்கள்



10.04.2025
துருக்கியிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்பவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்காது, அவர்களால் பேச முடியாது.

இப்படி அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அறிவியலாளர்கள்.
பெரும்பாலும் சைகை பாஷை மட்டுமே...

துருக்கியிலுள்ள கோகோவா (கோகோவா) என்னும் கிராமத்தில் வாழும் பாதிபேருக்கு வாய் பேச முடியாது, அவர்களுக்கு காதும் கேட்காது.

ஆகவே, கிராமத்தில் பெரும்பாலானோர் சைகை பாஷைதான் பேசுகிறார்கள்.

வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால்தான் அந்த மக்களுக்கு இந்த பிரச்சினை என்கிறார்கள் சிலர்.


 மற்றவர்களோ, இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கிராமத்தில் குழந்தை பிறக்கும்போது, ​​அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அக்கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என்கிறார்.




No comments:

Post a Comment