FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, April 23, 2025

ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்



22.04.2025 அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குகின்றனர். அங்கு குறைந்தபட்ச மாற்றுத் திறனாளிக்கு 6 ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச மாற்றுத்திறனாளிக்கு 10 ஆயிரம் ரூபாயும் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்குகின்றனர். இதுபோன்று தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சென்னைக்கு வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு சுமார் 500க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

‘’மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 30, 40 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகின்றன. கூலியும் முழுவதுமாக கொடுக்காமல் 150, 100, 80 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாட்கள் வேலையும் கொடுத்து கூலியும் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இன்று காலை தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் வந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். அனுமதி வழங்கிய இடத்தில் சென்று போராடுங்கள், இங்கு போராடக்கூடாது என்று கூறி காவல்துறையினர் எங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஊக்கத் தொகையை உயர்த்தவேண்டும் என்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


No comments:

Post a Comment