FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 23, 2025

ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்



22.04.2025 அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குகின்றனர். அங்கு குறைந்தபட்ச மாற்றுத் திறனாளிக்கு 6 ஆயிரம் ரூபாயும் அதிகபட்ச மாற்றுத்திறனாளிக்கு 10 ஆயிரம் ரூபாயும் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்குகின்றனர். இதுபோன்று தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்காததால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சென்னைக்கு வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். அப்போது மாற்றுத் திறனாளிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு சுமார் 500க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

‘’மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 30, 40 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகின்றன. கூலியும் முழுவதுமாக கொடுக்காமல் 150, 100, 80 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாட்கள் வேலையும் கொடுத்து கூலியும் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இன்று காலை தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் வந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். அனுமதி வழங்கிய இடத்தில் சென்று போராடுங்கள், இங்கு போராடக்கூடாது என்று கூறி காவல்துறையினர் எங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். ஊக்கத் தொகையை உயர்த்தவேண்டும் என்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


No comments:

Post a Comment