FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, April 10, 2025

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!



வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான பெண் மாற்றுத்திறனாளி. இவருக்கு காது கேளாமலும், வாய் பேசவும் முடியாது. மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் இவர் தனது பெற்றோருடனே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது பெற்றோர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று வெளியில் சென்றுள்ளனர்.

பின்னர், இரவு நிகழ்ச்சி முடித்து வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த மகள், மிகுந்த சோர்வாக இருப்பதை உணர்ந்துள்ளனர். எனவே, என்ன நடந்தது என அவரிடம் விசாரித்துள்ளனர். இதற்கு, வாய் பேச முடியாத அந்த மாற்றுத்திறனாளிப் பெண், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சைகை மொழியில் அழுதபடி கூறியுள்ளார்.

இதன்படி, அப்பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் (21) என்பவரை சிறு வயது முதலே வளர்த்து வந்துள்ளனர். விஷாலுக்கு பெற்றோர் இல்லை என்பதால், தனது சொந்த மகனைப்போலபே வளர்த்துள்ளனர். எப்போதும் இவர்களது வீட்டிற்கு வந்து செல்லும் தம்பியாக பாவித்தும் பாசம் காட்டி வந்துள்ளார் அப்பெண்.

ஆனால், நேற்று அவரது பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விஷால், முன் எப்போதும் இல்லாத மாதிரி நடந்துகொண்டுள்ளார். குறிப்பாக, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அப்பெண் மயங்கிவிட, விஷால் அங்கிருந்து விஷால் தப்பி ஓடியுள்ளார்.

எனவே, தனக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி அழ முடியாமல் தவித்துள்ளார் அந்தப் பெண். பின்னர், இது குறித்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி நடத்திய விசாரணையில், அவர்களின் மற்றொரு நண்பன் வீட்டில் விஷால் பதுங்கி இருப்பது தெரிந்துள்ளது.

இதனையடுத்து, நிகழ்விடம் சென்ற போலீசார், அங்கு மது போதையில் இருந்த விஷாலைக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment