FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 26, 2025

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளிகள், பணியாளர் சங்கங்கள் வரவேற்பு



26.04.2025 சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. கலைஞரின் வழித்தோன்றலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வை நீக்கி தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர். உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் என்றால் மிகை அல்ல. தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் பெயர்களிலும், இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சீரான கல்வி வழங்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர் கலைஞர்.

இந்த தேசத்தில் ஆளுமை மிக்க ஆழ்ந்த இலக்கிய புலமை வாய்ந்த அரசியல் வித்தகர் அரசியல் சாணக்கியர் என எல்லா திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் வாழ்ந்தார் என்றால் அது கலைஞர்தான். நாட்டிலேயே முதலிடத்திற்கு வந்திருக்கக்கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அத்தகைய தலைவர்களில் முக்கியமானவர் கலைஞர். அப்படி கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில், கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டி வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment