FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 26, 2025

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் மாற்றுத்திறனாளிகள், பணியாளர் சங்கங்கள் வரவேற்பு



26.04.2025 சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. கலைஞரின் வழித்தோன்றலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில்நுட்பக் கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வை நீக்கி தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர். உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் என்றால் மிகை அல்ல. தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோரின் பெயர்களிலும், இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சீரான கல்வி வழங்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முறையாக சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர் கலைஞர்.

இந்த தேசத்தில் ஆளுமை மிக்க ஆழ்ந்த இலக்கிய புலமை வாய்ந்த அரசியல் வித்தகர் அரசியல் சாணக்கியர் என எல்லா திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் வாழ்ந்தார் என்றால் அது கலைஞர்தான். நாட்டிலேயே முதலிடத்திற்கு வந்திருக்கக்கூடிய கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அத்தகைய தலைவர்களில் முக்கியமானவர் கலைஞர். அப்படி கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில், கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டி வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment