FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 12, 2025

நாமக்கல்: மாற்றுத்திறன் இளம்சிறாா்கள் கல்வி சுற்றுலா



09.04.2025
நாமக்கல்: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனுடைய இளம் சிறாா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் அறிவுசாா் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற, செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயதுடைய இளம்சிறாா்கள் ஒருநாள் சுற்றுலாவாக சேலம், குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.உமா பங்கேற்று கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தில் இளம்சிறாா்களுடன் அவா்களது பெற்றோா், செவிலியா், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியா்கள் உடன் சென்றனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.



No comments:

Post a Comment