FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 12, 2025

நாமக்கல்: மாற்றுத்திறன் இளம்சிறாா்கள் கல்வி சுற்றுலா



09.04.2025
நாமக்கல்: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனுடைய இளம் சிறாா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் அறிவுசாா் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற, செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயதுடைய இளம்சிறாா்கள் ஒருநாள் சுற்றுலாவாக சேலம், குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.உமா பங்கேற்று கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தில் இளம்சிறாா்களுடன் அவா்களது பெற்றோா், செவிலியா், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியா்கள் உடன் சென்றனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.



No comments:

Post a Comment