FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, April 12, 2025

நாமக்கல்: மாற்றுத்திறன் இளம்சிறாா்கள் கல்வி சுற்றுலா



09.04.2025
நாமக்கல்: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனுடைய இளம் சிறாா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் அறிவுசாா் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற, செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயதுடைய இளம்சிறாா்கள் ஒருநாள் சுற்றுலாவாக சேலம், குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.உமா பங்கேற்று கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தில் இளம்சிறாா்களுடன் அவா்களது பெற்றோா், செவிலியா், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியா்கள் உடன் சென்றனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.



No comments:

Post a Comment