FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 12, 2025

நாமக்கல்: மாற்றுத்திறன் இளம்சிறாா்கள் கல்வி சுற்றுலா



09.04.2025
நாமக்கல்: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனுடைய இளம் சிறாா்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் அறிவுசாா் குறைபாடுடைய, புற உலகு சிந்தனையற்ற, செவித்திறன் குறைபாடு உடையோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயதுடைய இளம்சிறாா்கள் ஒருநாள் சுற்றுலாவாக சேலம், குரும்பம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.உமா பங்கேற்று கல்வி சுற்றுலாப் பேருந்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தில் இளம்சிறாா்களுடன் அவா்களது பெற்றோா், செவிலியா், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பு ஆசிரியா்கள் உடன் சென்றனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.



No comments:

Post a Comment