FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, April 7, 2025

“அந்தரங்க உறுப்பை தொட்டு…” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய தந்தை…. கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்….!!



06.04.2025, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த 27 வயது வாய்பேச முடியாத, காது கேட்காத பெண் ஒருவர் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் பாட்டி இறந்துவிட்டார். அதன் பிறகு வாய் பேச முடியாத பெண் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரங்களில் தவறான உடல் தொடுகைகள், குளிக்கும் பொழுது அந்தரங்க உறுப்பை தொடுதல் போன்ற செயல்களில் தந்தை ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வீடியோ கால் மூலம் சித்தி மற்றும் அத்தைக்கு சைகைகளில் தனது நிலையை விளக்கியுள்ளார். “தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்கேயாவது போய்விடுவேன்” என அழுதபடி கூறியதை பார்த்த உறவினர்கள் அவரது தந்தையிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அவர் “என்ன செய்ய முடிகிறதோ செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார். இதனால் உறவினர்கள் கோபமடைந்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகும், ஒரு வாரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சமரசம் பேச முயற்சிப்பதாகவும், பெண்கள் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



No comments:

Post a Comment