FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, April 14, 2025

37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி பராமரிப்பு உதவித்தெகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



14.04.2025 
சென்னை: தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71.26 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் மொபட்கள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிக்கப்பட்ட ரூ.80,995 மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லூர், எஸ்.வி.கணேஷ் நாயக்கர் திருமணமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்ேகற்று மொபட்களை வழங்கி பேசியதாவது:

தென் சென்னை மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,67,20,000 பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.3,78,340 வங்கிகடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ.50000 வீதம் 2024-25ம் நிதியாண்டிற்கு வழங்கப்பட்டள்ளது. 3 நபருக்கு ரூ.1,50,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை பயிலும் 1009 மாற்றுத்திறனாளி ரூ.5.90,76,000 கல்வி உதவித்தொகையும், 197 பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.9,35,000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் இணைப்பு பொருத்தப்பட்ட பெட்ரோல் வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,13,78,000 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு குச்சி, பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி, செயற்கை கால், கால்தாங்கிகள், காதுக்கு பின்னால் அணியும் காதொலிகருவி மற்றும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்ட்ராய்டு போன், ஆகிய உதவி உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.32,20,526 வங்கிகடன் மானியம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.5.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சேழிங்கநல்லூர் மண்டல குழுத்தலைவர் மதியழகன், பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment