FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, April 14, 2025

37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி பராமரிப்பு உதவித்தெகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



14.04.2025 
சென்னை: தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71.26 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் மொபட்கள் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிக்கப்பட்ட ரூ.80,995 மதிப்பிலான ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லூர், எஸ்.வி.கணேஷ் நாயக்கர் திருமணமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்ேகற்று மொபட்களை வழங்கி பேசியதாவது:

தென் சென்னை மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,67,20,000 பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் 23 பயனாளிகளுக்கு ரூ.3,78,340 வங்கிகடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் பொருட்டு ஒரு நபருக்கு ரூ.50000 வீதம் 2024-25ம் நிதியாண்டிற்கு வழங்கப்பட்டள்ளது. 3 நபருக்கு ரூ.1,50,000 மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை பயிலும் 1009 மாற்றுத்திறனாளி ரூ.5.90,76,000 கல்வி உதவித்தொகையும், 197 பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.9,35,000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் இணைப்பு பொருத்தப்பட்ட பெட்ரோல் வழங்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,13,78,000 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மொபட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு குச்சி, பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி, செயற்கை கால், கால்தாங்கிகள், காதுக்கு பின்னால் அணியும் காதொலிகருவி மற்றும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்ட்ராய்டு போன், ஆகிய உதவி உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.32,20,526 வங்கிகடன் மானியம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மேக்னிபயர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் 452 நபர்களுக்கு ரூ.5.15.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 37,864 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சேழிங்கநல்லூர் மண்டல குழுத்தலைவர் மதியழகன், பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், மாமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment