FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, April 16, 2025

சைகையில் மாத்திரம் பேசும் மக்களை கொண்ட கிராமம் பற்றி தெரியுமா!



12.04.2025 
துருக்கியிலுள்ள (Turkey) ஒரு கிராமம் அறிவியலாளர்களை மிக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த கிராமத்தில் வாழ்பவர்களில் 50 சதவீதமானவர்களுக்கு காது கேட்காது என்பதுடன் அவர்களால் பேசவும் முடியாது.

துருக்கியிலுள்ள கோகோவா (Gokova) என்னும் கிராமத்தில் வாழும் மக்களுக்கே இவ்வாறான ஒரு புது வித பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த கிராமத்தில் வாழும் பெரும்பாலானோர் சைகை பாஷையை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது தான் காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மற்றும் சிலர் , இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளதுதான் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.

ஒவ்வொரு முறை கிராமத்தில் குழந்தை பிறக்கும்போதும், அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அந்த கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment