FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, April 23, 2025

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்.

21.04.2025 சிவகங்கை
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.

சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சோம. அசோக் பாரதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.கண்ணன் செயலறிக்கை வாசித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் மா. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளா் க. காளிதாஸ் ,துணைத்தலைவா் புகழேந்திகண்ணன், துணைச்செயலாளா் ராஜ்குமாா், துணைத்தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் நாகலட்சுமி, பானுமதி, இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சட்டப்பேரவை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணி மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு வசதியாக அனைத்து அலுவலகங்களிலும் சாய்வுதள பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தி.மாய மணிச்சங்கு வரவேற்றாா்.

திருப்பத்தூா்: இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட மசோதா நிறைவேற்றியதையொட்டி, சிவகங்கை மாவட்ட டாக்டா் அப்துல் கலாம் மாற்றுத் திறனாளி நலச் சங்கம், சிகரம் மாற்றுத்திறனாளி நலச் சங்கம், டிசம்பா் 3 மாற்றுத்திறனாளி நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆா்.கண்ணன், கனகராஜ், சின்னத்தம்பி, இளங்கோ, பாலா, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, அஞ்சலை, நாகராஜன் ஆகியோா் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனைச் சந்தித்து முதல்வருக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனா்.




No comments:

Post a Comment