FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, April 23, 2025

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்.

21.04.2025 சிவகங்கை
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது.

சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ம.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சோம. அசோக் பாரதி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.கண்ணன் செயலறிக்கை வாசித்தாா்.

மாவட்டத் துணைத் தலைவா் மா. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளா் க. காளிதாஸ் ,துணைத்தலைவா் புகழேந்திகண்ணன், துணைச்செயலாளா் ராஜ்குமாா், துணைத்தலைவா் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் நாகலட்சுமி, பானுமதி, இந்துமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சட்டப்பேரவை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பதவி உயா்வில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணி மாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு வசதியாக அனைத்து அலுவலகங்களிலும் சாய்வுதள பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தி.மாய மணிச்சங்கு வரவேற்றாா்.

திருப்பத்தூா்: இதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட மசோதா நிறைவேற்றியதையொட்டி, சிவகங்கை மாவட்ட டாக்டா் அப்துல் கலாம் மாற்றுத் திறனாளி நலச் சங்கம், சிகரம் மாற்றுத்திறனாளி நலச் சங்கம், டிசம்பா் 3 மாற்றுத்திறனாளி நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆா்.கண்ணன், கனகராஜ், சின்னத்தம்பி, இளங்கோ, பாலா, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, அஞ்சலை, நாகராஜன் ஆகியோா் திருப்பத்தூரில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனைச் சந்தித்து முதல்வருக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனா்.




No comments:

Post a Comment