FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, April 26, 2025

வாய் பேச முடியாத பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பஸ் மறியல்


14.04.2025 
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெரு செபஸ்டியான் மகள் அற்புதமேரி 29. இவர் வாய் பேச முடியாதவர். கடந்த ஏப்.8ல் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். பின், கடந்த ஏப்.10ல் அற்புதமேரியை உத்தமபாளையம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் செபஸ்டியான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர், இந்த பெண்ணை அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து, பாலியல் கொடுமை செய்ததாகக்கூறி, அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் குற்றம் சாட்டினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு 8:00 மணியளவில் செபஸ்டியான் குடும்பத்தாரும், பொது மக்களும் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்ததாக கூறி உள்ளார். அதற்கான சி.சி.டி.வி., கேமரா வீடியோ பதிவுகளையும் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.வாய் பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண், அவரை கை காட்டி சைகையில் கூறியதாகவும், அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ் மறியல் இரவு 9:00 மணியாகியும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து நடந்தது.


No comments:

Post a Comment