FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 26, 2025

வாய் பேச முடியாத பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பஸ் மறியல்


14.04.2025 
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெரு செபஸ்டியான் மகள் அற்புதமேரி 29. இவர் வாய் பேச முடியாதவர். கடந்த ஏப்.8ல் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். பின், கடந்த ஏப்.10ல் அற்புதமேரியை உத்தமபாளையம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் செபஸ்டியான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர், இந்த பெண்ணை அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து, பாலியல் கொடுமை செய்ததாகக்கூறி, அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் குற்றம் சாட்டினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு 8:00 மணியளவில் செபஸ்டியான் குடும்பத்தாரும், பொது மக்களும் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்ததாக கூறி உள்ளார். அதற்கான சி.சி.டி.வி., கேமரா வீடியோ பதிவுகளையும் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.வாய் பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண், அவரை கை காட்டி சைகையில் கூறியதாகவும், அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ் மறியல் இரவு 9:00 மணியாகியும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து நடந்தது.


No comments:

Post a Comment