FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 26, 2025

வாய் பேச முடியாத பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பஸ் மறியல்


14.04.2025 
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெரு செபஸ்டியான் மகள் அற்புதமேரி 29. இவர் வாய் பேச முடியாதவர். கடந்த ஏப்.8ல் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். பின், கடந்த ஏப்.10ல் அற்புதமேரியை உத்தமபாளையம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் செபஸ்டியான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர், இந்த பெண்ணை அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து, பாலியல் கொடுமை செய்ததாகக்கூறி, அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் குற்றம் சாட்டினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு 8:00 மணியளவில் செபஸ்டியான் குடும்பத்தாரும், பொது மக்களும் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்ததாக கூறி உள்ளார். அதற்கான சி.சி.டி.வி., கேமரா வீடியோ பதிவுகளையும் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.வாய் பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண், அவரை கை காட்டி சைகையில் கூறியதாகவும், அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ் மறியல் இரவு 9:00 மணியாகியும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து நடந்தது.


No comments:

Post a Comment