FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 26, 2025

வாய் பேச முடியாத பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் பஸ் மறியல்


14.04.2025 
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் நேற்று இரவு 8:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் பாறை மேட்டு தெரு செபஸ்டியான் மகள் அற்புதமேரி 29. இவர் வாய் பேச முடியாதவர். கடந்த ஏப்.8ல் வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். பின், கடந்த ஏப்.10ல் அற்புதமேரியை உத்தமபாளையம் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் செபஸ்டியான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர், இந்த பெண்ணை அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து, பாலியல் கொடுமை செய்ததாகக்கூறி, அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் குற்றம் சாட்டினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று இரவு 8:00 மணியளவில் செபஸ்டியான் குடும்பத்தாரும், பொது மக்களும் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் கடந்த 3 மாதங்களாக சென்னையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்ததாக கூறி உள்ளார். அதற்கான சி.சி.டி.வி., கேமரா வீடியோ பதிவுகளையும் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.வாய் பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக சம்பந்தப்பட்ட பெண், அவரை கை காட்டி சைகையில் கூறியதாகவும், அவரை போலீசார் தப்ப விட்டதாகவும் கூறி அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ் மறியல் இரவு 9:00 மணியாகியும் முடிவிற்கு வரவில்லை. தொடர்ந்து நடந்தது.


No comments:

Post a Comment