FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 26, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன்


தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்குவதற்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை குறைபாட்டுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment