FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 26, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன்


தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்குவதற்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை குறைபாட்டுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment