FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, April 16, 2025

மாற்றுத்திறனாளிகள் 2,50,987 பேருக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்



15.04.2025 
சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 55ன் கீழ் சங்ககிரி சுந்தரராஜன் (அதிமுக) கவனஈர்ப்பு கொண்டு வந்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்போது ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டாலும், 65 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் வாகனம் வழங்குவதற்கு பதில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அரசு வழங்க வேண்டும்‘‘ என்றார்.

இதற்கு பதில் அளித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் நோயினால் பாதிக்கப்பட்டோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் அடுத்த மாதமே பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 2,50,987 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment