FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 16, 2025

மாற்றுத்திறனாளிகள் 2,50,987 பேருக்கு ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்



15.04.2025 
சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 55ன் கீழ் சங்ககிரி சுந்தரராஜன் (அதிமுக) கவனஈர்ப்பு கொண்டு வந்து பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்போது ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டாலும், 65 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் வாகனம் வழங்குவதற்கு பதில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அரசு வழங்க வேண்டும்‘‘ என்றார்.

இதற்கு பதில் அளித்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் நோயினால் பாதிக்கப்பட்டோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புறஉலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் அடுத்த மாதமே பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 2,50,987 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment