FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, October 31, 2018

அயனாவரம் காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமி பாலியல் வழக்கு கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்: விசாரணை நவம்பர் 13க்கு தள்ளிவைப்பு

31.10.2018
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை கைது செய்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் 17 பேர் மீதும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 17 பேரும் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக ேநற்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி 17 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 3 பேர் தங்களுக்கென வக்கீல்களை நியமித்துள்ளனர். மற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment