FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 31, 2018

அயனாவரம் காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமி பாலியல் வழக்கு கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்: விசாரணை நவம்பர் 13க்கு தள்ளிவைப்பு

31.10.2018
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை கைது செய்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் 17 பேர் மீதும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 17 பேரும் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக ேநற்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி 17 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 3 பேர் தங்களுக்கென வக்கீல்களை நியமித்துள்ளனர். மற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment