FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, October 31, 2018

அயனாவரம் காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமி பாலியல் வழக்கு கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்: விசாரணை நவம்பர் 13க்கு தள்ளிவைப்பு

31.10.2018
சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை கைது செய்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் 17 பேர் மீதும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 17 பேரும் குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக ேநற்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி 17 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகலை வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார். கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 3 பேர் தங்களுக்கென வக்கீல்களை நியமித்துள்ளனர். மற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment