FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, October 23, 2018

தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா!



21.10.2018, தூத்துக்குடி: மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் மாநில உடல் ஊனமுற்றோர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கேளாதோர் முன்னேற்ற மற்றும் மறுவாழ்வு சங்க தலைவர் மெய்கண்டன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவி ப்ரீத்தி சிவ பிச்சமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் அந்த மாணவிக்கு பரிசு மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவிக்கு வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் இளமாறன், சந்தோஷ்குமார், அரசமுத்து, முரளிச்செல்வன், சுரேஷ், பாலாராவ், மாவட்ட செயலாளர் ரபேல் தாமஸ் போஸ்கோ, பொருளாளர் சின்னதுரை உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment