FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, October 23, 2018

தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா!



21.10.2018, தூத்துக்குடி: மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் மாநில உடல் ஊனமுற்றோர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கேளாதோர் முன்னேற்ற மற்றும் மறுவாழ்வு சங்க தலைவர் மெய்கண்டன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவி ப்ரீத்தி சிவ பிச்சமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் அந்த மாணவிக்கு பரிசு மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவிக்கு வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் இளமாறன், சந்தோஷ்குமார், அரசமுத்து, முரளிச்செல்வன், சுரேஷ், பாலாராவ், மாவட்ட செயலாளர் ரபேல் தாமஸ் போஸ்கோ, பொருளாளர் சின்னதுரை உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment