FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, October 23, 2018

தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா!



21.10.2018, தூத்துக்குடி: மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் மாநில உடல் ஊனமுற்றோர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கேளாதோர் முன்னேற்ற மற்றும் மறுவாழ்வு சங்க தலைவர் மெய்கண்டன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவி ப்ரீத்தி சிவ பிச்சமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் அந்த மாணவிக்கு பரிசு மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவிக்கு வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் இளமாறன், சந்தோஷ்குமார், அரசமுத்து, முரளிச்செல்வன், சுரேஷ், பாலாராவ், மாவட்ட செயலாளர் ரபேல் தாமஸ் போஸ்கோ, பொருளாளர் சின்னதுரை உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment