FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 18, 2018

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு

18.10.2018
புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை கடந்த 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில், புனேயில் காத்கி புறநகர் பகுதியில் உள்ள கிர்க்கியில் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான 34 வயது பெண்ணை இரவுப் பணியின் போது மருத்துவமனை பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மற்றொரு ராணுவ வீரரிடம் கூறவும் அந்த அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் குற்றம் புரிந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதற்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து மேலும் இரு வீரர்கள் என நான்கு ராணுவ வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

நான்காம் பணிநிலை ஊழியரான மாற்றுத் திறனாளி பெண் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள என்ஜிஓ ஒன்றை அணுகி தனக்கு நேர்ந்த துன்பங்களை விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), 354-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அவர்கள் மீது துறை சார்ந்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு கமாண்டர் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment