FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 18, 2018

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு

18.10.2018
புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை கடந்த 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில், புனேயில் காத்கி புறநகர் பகுதியில் உள்ள கிர்க்கியில் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான 34 வயது பெண்ணை இரவுப் பணியின் போது மருத்துவமனை பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மற்றொரு ராணுவ வீரரிடம் கூறவும் அந்த அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் குற்றம் புரிந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதற்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து மேலும் இரு வீரர்கள் என நான்கு ராணுவ வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

நான்காம் பணிநிலை ஊழியரான மாற்றுத் திறனாளி பெண் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள என்ஜிஓ ஒன்றை அணுகி தனக்கு நேர்ந்த துன்பங்களை விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), 354-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அவர்கள் மீது துறை சார்ந்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு கமாண்டர் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment