FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 18, 2018

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு

18.10.2018
புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை கடந்த 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில், புனேயில் காத்கி புறநகர் பகுதியில் உள்ள கிர்க்கியில் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான 34 வயது பெண்ணை இரவுப் பணியின் போது மருத்துவமனை பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மற்றொரு ராணுவ வீரரிடம் கூறவும் அந்த அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் குற்றம் புரிந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதற்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து மேலும் இரு வீரர்கள் என நான்கு ராணுவ வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

நான்காம் பணிநிலை ஊழியரான மாற்றுத் திறனாளி பெண் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள என்ஜிஓ ஒன்றை அணுகி தனக்கு நேர்ந்த துன்பங்களை விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), 354-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அவர்கள் மீது துறை சார்ந்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு கமாண்டர் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment