FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, October 18, 2018

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு

18.10.2018
புனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஊழியரை கடந்த 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நான்கு ராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில், புனேயில் காத்கி புறநகர் பகுதியில் உள்ள கிர்க்கியில் ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய போது இந்த சம்பவம் நடந்ததாக அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான 34 வயது பெண்ணை இரவுப் பணியின் போது மருத்துவமனை பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் மற்றொரு ராணுவ வீரரிடம் கூறவும் அந்த அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் குற்றம் புரிந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதற்கு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து மேலும் இரு வீரர்கள் என நான்கு ராணுவ வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

நான்காம் பணிநிலை ஊழியரான மாற்றுத் திறனாளி பெண் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள என்ஜிஓ ஒன்றை அணுகி தனக்கு நேர்ந்த துன்பங்களை விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது இந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), 354-ன் (பாலியல் பலாத்காரம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அவர்கள் மீது துறை சார்ந்த ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு கமாண்டர் கூறினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment