FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, October 9, 2018

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை


09.10.2018, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment