FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, October 15, 2018

அமைகிறது:மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி மையம்.மதுரையில் அமைய ஏற்பாடு

15.10.2018
மதுரை:தமிழகத்தில் முதன்முறையாக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் மதுரையில் அமைய உள்ளது.

அழகர்கோவிலில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.நிறுவனர் டாக்டர் ராமசுப்ரமணியன் வரவேற்றார்.ஆலோசகர் சங்கரபாண்டியன், மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பாரிபரமேஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் பேசினர்.
அரசு திறன்மேம்பாட்டு கழக அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, ''மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் மகேஸ்வரி, ''தமிழகத்தில் 1.86 லட்சம் பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கி உள்ளோம்'' என்றார்.கலெக்டர் நடராஜன், ''தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்க உள்ளோம்'' என்றார். செயல் இயக்குனர் ராஜ்குமாரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment