FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, October 15, 2018

அமைகிறது:மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி மையம்.மதுரையில் அமைய ஏற்பாடு

15.10.2018
மதுரை:தமிழகத்தில் முதன்முறையாக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் மதுரையில் அமைய உள்ளது.

அழகர்கோவிலில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.நிறுவனர் டாக்டர் ராமசுப்ரமணியன் வரவேற்றார்.ஆலோசகர் சங்கரபாண்டியன், மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பாரிபரமேஸ்வரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் பேசினர்.
அரசு திறன்மேம்பாட்டு கழக அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, ''மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் மகேஸ்வரி, ''தமிழகத்தில் 1.86 லட்சம் பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கி உள்ளோம்'' என்றார்.கலெக்டர் நடராஜன், ''தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்க உள்ளோம்'' என்றார். செயல் இயக்குனர் ராஜ்குமாரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment