FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, October 14, 2018

காது கேளாத குழந்தைகளுக்கானஇலவச சிறப்பு மருத்துவ முகாம்

12.10.2018
திண்டிவனம்:திண்டிவனத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

திண்டிவனம் வாசவி நர்சரி பள்ளியில், திண்டிவனம் அரிமா சங்கம், ராம் டெக்ஸ்டைல்ஸ், மெட்ராஸ் இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நேற்று காலை மருத்துவ முகாமை நடத்தியது. முகாம் துவக்க விழாவிற்கு, திண்டிவனம் அரிமா சங்க தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். செயலர் சக்திவேல் வரவேற்றார். 

ராம்டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஓவியர்தேவ், சாய்நாத், வழக்கறிஞர் கார்த்திக், ராமமூர்த்தி, நாகப்பன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் குழுவை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

No comments:

Post a Comment