FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, October 8, 2018

வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண் கர்ப்பம்: முதியவர் மீது போலீசில் புகார்


08.10.2018
நாமக்கல்: மாற்றுத்திறனாளி பெண், கர்ப்பத்துக்கு காரணமாக வயதானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தாயார் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நாமக்கல், எம்.ஜி.ஆர்., நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செங்கோட்டையன் - விஜயா தம்பதியினர். அவர்களுக்கு, தனலட்சுமி, 22 என்ற மகள் உள்ளார். அவர், வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுடன், மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனலட்சுமி கர்ப்பிணியானதுடன், பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நேற்று, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், விஜயா, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், தன் மகள் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஒரு வயதானவர்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். பரிசோதனைக்காகவும், பிரசவத்துக்காகவும், தனலட்சுமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment