FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, October 2, 2018

'சைகை ஒரு மொழி' விழிப்புணர்வு: வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

30.09.2018
சேலம்: சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம், சேலத்தில், நேற்று நடந்தது. மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க பொதுச்செயலர் அருண்குமார் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், திருவள்ளுவர் சிலை, செரிரோடு, முள்ளுவாடி கேட் வழியாக, தொன்போஸ்கோ பள்ளியை அடைந்தது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த வாய் பேசாத, காது கேளாத, 120 பேர் பங்கேற்றனர். அருண்குமார் கூறியதாவது: காது கேளாத, வாய் பேசாதோர் காட்டும் சைகையும் ஒரு மொழியே. அதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் அத்தகைய மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைக்கவே, விழிப்புணர்வு ஊர்வலம். அதற்கான, அங்கீகாரம் பெற, அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சங்கத்தில் இணைவோருக்கு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவி செய்யப்படும். அதற்கு, 95006 48712 என்ற மொபைலில், வீடியோ காலில், சைகை மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment