FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, October 2, 2018

'சைகை ஒரு மொழி' விழிப்புணர்வு: வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

30.09.2018
சேலம்: சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம், சேலத்தில், நேற்று நடந்தது. மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க பொதுச்செயலர் அருண்குமார் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், திருவள்ளுவர் சிலை, செரிரோடு, முள்ளுவாடி கேட் வழியாக, தொன்போஸ்கோ பள்ளியை அடைந்தது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த வாய் பேசாத, காது கேளாத, 120 பேர் பங்கேற்றனர். அருண்குமார் கூறியதாவது: காது கேளாத, வாய் பேசாதோர் காட்டும் சைகையும் ஒரு மொழியே. அதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் அத்தகைய மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைக்கவே, விழிப்புணர்வு ஊர்வலம். அதற்கான, அங்கீகாரம் பெற, அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சங்கத்தில் இணைவோருக்கு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவி செய்யப்படும். அதற்கு, 95006 48712 என்ற மொபைலில், வீடியோ காலில், சைகை மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment