FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, October 2, 2018

'சைகை ஒரு மொழி' விழிப்புணர்வு: வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

30.09.2018
சேலம்: சர்வதேச காது கேளாதோர் வார விழிப்புணர்வு ஊர்வலம், சேலத்தில், நேற்று நடந்தது. மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க பொதுச்செயலர் அருண்குமார் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், திருவள்ளுவர் சிலை, செரிரோடு, முள்ளுவாடி கேட் வழியாக, தொன்போஸ்கோ பள்ளியை அடைந்தது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த வாய் பேசாத, காது கேளாத, 120 பேர் பங்கேற்றனர். அருண்குமார் கூறியதாவது: காது கேளாத, வாய் பேசாதோர் காட்டும் சைகையும் ஒரு மொழியே. அதுபற்றிய விழிப்புணர்வு மற்றும் அத்தகைய மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைக்கவே, விழிப்புணர்வு ஊர்வலம். அதற்கான, அங்கீகாரம் பெற, அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி, வேலை வாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சங்கத்தில் இணைவோருக்கு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவி செய்யப்படும். அதற்கு, 95006 48712 என்ற மொபைலில், வீடியோ காலில், சைகை மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment