FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, October 9, 2018

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

09.10.2018
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மேலும் பணித்தளத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ெபாறுப்பாளர், குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம். பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல், 100க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத்திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்.

பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) ஆழப்படுத்தும் தளத்தில் தண்ணீர் தெளித்தல், மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்தல், கரைகளை சமன்படுத்துதல், உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத்தினாளிகளை மண்வேலை, மண்மூடுதல், நீர்பாய்ச்சல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவற்றை துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவது, ஊதியம் அளித்தது குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

மேற்கூறிய நடைமுறைகளை ஊராட்சி அளவில் பணித்தளப்பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலரும், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்வதோடு மாவட்ட அளவில் முறையாக கண்காணிக்க வேண்டும். என திட்ட இயக்குநர், மாவட்ட ஊரகவளர்ச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நடைமுறையினை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இத்திட்ட செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்திட சிறப்பு முகாம் அமைத்து விடுபட்ட நபர்களை இத்திட்டத்தில் இணைத்து வேலை அடையாள அட்டைகளை வழங்கிடவும், அடையாள அட்டை வழங்கப்பட்ட நபர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment