FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, October 9, 2018

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு

09.10.2018
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மேலும் பணித்தளத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ெபாறுப்பாளர், குழந்தைகளுக்கும் ஒரு கூடுதல் உதவியாளர் அமர்த்தலாம். பணித்தளப் பொறுப்பாளர் முன்அளவீட்டினை மேற்கொள்ள உதவுதல், 100க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இருப்பின் ஒரு மாற்றுத்திறனாளியினை பணித்தள பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தலாம்.

பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) ஆழப்படுத்தும் தளத்தில் தண்ணீர் தெளித்தல், மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு கரைகளில் கொட்டப்படும் மண்களை சமப்படுத்தல், கரைகளை சமன்படுத்துதல், உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத்தினாளிகளை மண்வேலை, மண்மூடுதல், நீர்பாய்ச்சல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவற்றை துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவது, ஊதியம் அளித்தது குறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

மேற்கூறிய நடைமுறைகளை ஊராட்சி அளவில் பணித்தளப்பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலரும், வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்வதோடு மாவட்ட அளவில் முறையாக கண்காணிக்க வேண்டும். என திட்ட இயக்குநர், மாவட்ட ஊரகவளர்ச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நடைமுறையினை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இத்திட்ட செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்திட சிறப்பு முகாம் அமைத்து விடுபட்ட நபர்களை இத்திட்டத்தில் இணைத்து வேலை அடையாள அட்டைகளை வழங்கிடவும், அடையாள அட்டை வழங்கப்பட்ட நபர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment