FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, October 23, 2018

தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கும் வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத மாற்றுத்திறனாளி வேட்பாளர்!


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், இந்தியாவிலேயே முதன் முறையாக வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிம் சத்னாவில் வாய் பேச முடியாத, காது கேளாத சுதீப் சுக்லா என்ற இளைஞர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக தனித்து போட்டியிடுகிறார்.

இந்தியாவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத ஒருவர் போட்டியிடுவது முதல் முறையாகும்.

இவர் ஏற்கனவே சாப்டுவேர் துறையில் ஒரு லட்சம் சம்பளத்துடன் வேலையை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளர்.

இது குறித்து, சுதீப் சுக்லா கூறுகையில், டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களை எந்த அரசியல் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். 

இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் மாற்றைத்தை காண்பீர்கள் கூறினார். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமே வாக்குறுதி கொடுக்கிறார்கள், வெற்றி பெற்ற பின்பு மக்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment