FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 18, 2018

காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத பெண்ணை 4 வருடங்களாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு


17.10.2018, புனே,
மராட்டிய மாநிலம் புனேவின் காத்கியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிவந்த 30 வயது பெண்ணை மருத்துவமனையில் வைத்து ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள பெண், மருத்துவமனையில் இரவு பணிகளின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக என்னிடம் தவறாகவே நடந்துக்கொண்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் தெரிந்த மேலும் 2 ராணுவ வீரர்கள் அந்த பெண்ணிடம் தவறாகவே நடந்துக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக 4 ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் இல்லாத பெண்ணிற்கு 12 வயதில் மகன் உள்ளான். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment