FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, October 2, 2018

தேர்தல் அதிகாரிகளுக்கு 'சைகை மொழி' பயிற்சி


30.09.2018
காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க வசதியாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு, 'லோக்சபா' தேர்தல் நடப்பதால் நாடு முழுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. தகுதியான அனைத்து வாக்காளரும் அணுகும் வகையில், தேர்தல் நடவடிக்கை அமைய வேண்டுமென தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து, ஜனநாயக கடமையாற்ற செய்வது என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பட்டியலில் இல்லாத தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து, பட்டியலில் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தேர்தல் அலுவலர், பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தாசில்தார்கள் கூறுகையில், 'காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அலுவலர்கள், 'சைகை' மொழியை கற்க வேண்டியுள்ளது. 'சைகை' மொழி பயிற்சி நிபுணர்களை அழைத்து, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள், பெயரை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment