FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, October 2, 2018

தேர்தல் அதிகாரிகளுக்கு 'சைகை மொழி' பயிற்சி


30.09.2018
காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க வசதியாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு, 'லோக்சபா' தேர்தல் நடப்பதால் நாடு முழுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. தகுதியான அனைத்து வாக்காளரும் அணுகும் வகையில், தேர்தல் நடவடிக்கை அமைய வேண்டுமென தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து, ஜனநாயக கடமையாற்ற செய்வது என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பட்டியலில் இல்லாத தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து, பட்டியலில் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தேர்தல் அலுவலர், பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தாசில்தார்கள் கூறுகையில், 'காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அலுவலர்கள், 'சைகை' மொழியை கற்க வேண்டியுள்ளது. 'சைகை' மொழி பயிற்சி நிபுணர்களை அழைத்து, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள், பெயரை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment