FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, October 2, 2018

தேர்தல் அதிகாரிகளுக்கு 'சைகை மொழி' பயிற்சி


30.09.2018
காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க வசதியாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு, 'லோக்சபா' தேர்தல் நடப்பதால் நாடு முழுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. தகுதியான அனைத்து வாக்காளரும் அணுகும் வகையில், தேர்தல் நடவடிக்கை அமைய வேண்டுமென தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து, ஜனநாயக கடமையாற்ற செய்வது என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பட்டியலில் இல்லாத தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து, பட்டியலில் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தேர்தல் அலுவலர், பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தாசில்தார்கள் கூறுகையில், 'காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அலுவலர்கள், 'சைகை' மொழியை கற்க வேண்டியுள்ளது. 'சைகை' மொழி பயிற்சி நிபுணர்களை அழைத்து, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள், பெயரை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment