FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, October 2, 2018

தேர்தல் அதிகாரிகளுக்கு 'சைகை மொழி' பயிற்சி


30.09.2018
காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க வசதியாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு, 'லோக்சபா' தேர்தல் நடப்பதால் நாடு முழுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. தகுதியான அனைத்து வாக்காளரும் அணுகும் வகையில், தேர்தல் நடவடிக்கை அமைய வேண்டுமென தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து, ஜனநாயக கடமையாற்ற செய்வது என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பட்டியலில் இல்லாத தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து, பட்டியலில் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தேர்தல் அலுவலர், பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தாசில்தார்கள் கூறுகையில், 'காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அலுவலர்கள், 'சைகை' மொழியை கற்க வேண்டியுள்ளது. 'சைகை' மொழி பயிற்சி நிபுணர்களை அழைத்து, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள், பெயரை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment