FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, October 24, 2018

2 நிமிட விழிப்புணர்வுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு: கொளுத்திய வெயிலில் விழி பிதுங்கிய காது கேட்காத, வாய் பேச முடியாத 'சிறப்பு' குழந்தைகள்

23.10.2018
ஈரோடு: இரண்டு நிமிட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, காது கேட்காத, வாய் பேச முடியாத, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஈரோடு அரசு காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 60 பேர், பெருந்துறை சிலேட்டர் புரம் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 18 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கலெக்டர் வருவார் என, கூடைப்பந்து மைதானத்தில், ஈரோடு, 100 சதவீதம் ஓட்டு என்ற எழுத்து வடிவில் அமர வைக்கப்பட்டனர். நேரமானதே தவிர, கலெக்டர் வரவில்லை. 9:30 மணிக்கு வெயில் அதிகமானதால், மாணவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர். பிறகு, 9:55 மணிக்கு கலெக்டர் கதிரவன் வந்தார். மாணவர்களை மைதானத்தில் மீண்டும் அமர வைத்து பார்வையிட்டார். இரண்டு நிமிடத்துக்கு பின், வெயில் அதிகமாக இருக்கிறது. மாணவர்களை உடனடியாக அழைத்து செல்லுங்கள் எனக்கூறி விட்டு, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கலெக்டர் சென்றார். இரண்டு நிமிடத்துக்காக, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை பார்த்த பலர் வேதனைப்பட்டனர். அடுத்து வரும் நிகழ்வுகளில், இதுபோன்ற பிறர் சிரமங்களை தவிர்க்க, அரசு அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment