FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, October 24, 2018

2 நிமிட விழிப்புணர்வுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு: கொளுத்திய வெயிலில் விழி பிதுங்கிய காது கேட்காத, வாய் பேச முடியாத 'சிறப்பு' குழந்தைகள்

23.10.2018
ஈரோடு: இரண்டு நிமிட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, காது கேட்காத, வாய் பேச முடியாத, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஈரோடு அரசு காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 60 பேர், பெருந்துறை சிலேட்டர் புரம் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 18 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கலெக்டர் வருவார் என, கூடைப்பந்து மைதானத்தில், ஈரோடு, 100 சதவீதம் ஓட்டு என்ற எழுத்து வடிவில் அமர வைக்கப்பட்டனர். நேரமானதே தவிர, கலெக்டர் வரவில்லை. 9:30 மணிக்கு வெயில் அதிகமானதால், மாணவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர். பிறகு, 9:55 மணிக்கு கலெக்டர் கதிரவன் வந்தார். மாணவர்களை மைதானத்தில் மீண்டும் அமர வைத்து பார்வையிட்டார். இரண்டு நிமிடத்துக்கு பின், வெயில் அதிகமாக இருக்கிறது. மாணவர்களை உடனடியாக அழைத்து செல்லுங்கள் எனக்கூறி விட்டு, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கலெக்டர் சென்றார். இரண்டு நிமிடத்துக்காக, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை பார்த்த பலர் வேதனைப்பட்டனர். அடுத்து வரும் நிகழ்வுகளில், இதுபோன்ற பிறர் சிரமங்களை தவிர்க்க, அரசு அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment