FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, October 24, 2018

2 நிமிட விழிப்புணர்வுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு: கொளுத்திய வெயிலில் விழி பிதுங்கிய காது கேட்காத, வாய் பேச முடியாத 'சிறப்பு' குழந்தைகள்

23.10.2018
ஈரோடு: இரண்டு நிமிட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, காது கேட்காத, வாய் பேச முடியாத, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஈரோடு அரசு காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 60 பேர், பெருந்துறை சிலேட்டர் புரம் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 18 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கலெக்டர் வருவார் என, கூடைப்பந்து மைதானத்தில், ஈரோடு, 100 சதவீதம் ஓட்டு என்ற எழுத்து வடிவில் அமர வைக்கப்பட்டனர். நேரமானதே தவிர, கலெக்டர் வரவில்லை. 9:30 மணிக்கு வெயில் அதிகமானதால், மாணவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர். பிறகு, 9:55 மணிக்கு கலெக்டர் கதிரவன் வந்தார். மாணவர்களை மைதானத்தில் மீண்டும் அமர வைத்து பார்வையிட்டார். இரண்டு நிமிடத்துக்கு பின், வெயில் அதிகமாக இருக்கிறது. மாணவர்களை உடனடியாக அழைத்து செல்லுங்கள் எனக்கூறி விட்டு, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கலெக்டர் சென்றார். இரண்டு நிமிடத்துக்காக, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை பார்த்த பலர் வேதனைப்பட்டனர். அடுத்து வரும் நிகழ்வுகளில், இதுபோன்ற பிறர் சிரமங்களை தவிர்க்க, அரசு அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment