FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, October 24, 2018

2 நிமிட விழிப்புணர்வுக்கு 2 மணி நேரம் காத்திருப்பு: கொளுத்திய வெயிலில் விழி பிதுங்கிய காது கேட்காத, வாய் பேச முடியாத 'சிறப்பு' குழந்தைகள்

23.10.2018
ஈரோடு: இரண்டு நிமிட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக, காது கேட்காத, வாய் பேச முடியாத, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டரங்கில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, ஈரோடு அரசு காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சிறப்பு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், 60 பேர், பெருந்துறை சிலேட்டர் புரம் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 18 பேர் அழைத்து வரப்பட்டனர். காலை, 8:00 மணிக்கு கலெக்டர் வருவார் என, கூடைப்பந்து மைதானத்தில், ஈரோடு, 100 சதவீதம் ஓட்டு என்ற எழுத்து வடிவில் அமர வைக்கப்பட்டனர். நேரமானதே தவிர, கலெக்டர் வரவில்லை. 9:30 மணிக்கு வெயில் அதிகமானதால், மாணவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர். பிறகு, 9:55 மணிக்கு கலெக்டர் கதிரவன் வந்தார். மாணவர்களை மைதானத்தில் மீண்டும் அமர வைத்து பார்வையிட்டார். இரண்டு நிமிடத்துக்கு பின், வெயில் அதிகமாக இருக்கிறது. மாணவர்களை உடனடியாக அழைத்து செல்லுங்கள் எனக்கூறி விட்டு, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கலெக்டர் சென்றார். இரண்டு நிமிடத்துக்காக, சிறப்பு குழந்தைகள், இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டதை பார்த்த பலர் வேதனைப்பட்டனர். அடுத்து வரும் நிகழ்வுகளில், இதுபோன்ற பிறர் சிரமங்களை தவிர்க்க, அரசு அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment