FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, October 26, 2018

இழந்த செவித் திறனை மீட்டக முடியுமா?

25.10.2018
காது கேட்காமல் போவதை குணப்படுத்தும் ஆய்வில், முக்கிய முன்னேற்றத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாள்பட காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. உட் காதுப் பகுதியில் நத்தையின் சுருண்ட கொம்புகளைப் போல உள்ள பகுதியில் வளரும் முடி வடிவில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது அதில் ஒன்று. ஒரு மனிதருக்கு சராசரியாக, 15 ஆயிரம் செல்கள் இருக்கும்.

மிகையான இரைச்சல், அத்துமீறிய ஓசை போன்றவற்றால் இந்த நுண்ணிய செல்கள் நாளடைவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், காதின் ஒலி உணர் திறன் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் காது கேளாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

மனிதனின் உடலில் உள்ள பிற செல்களைப் போல முடி செல்கள் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் வளர்வதில்லை. எனவே, அவற்றின் வளர்ச்சியை மீண்டும் துாண்ட முடியுமா என, விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனில் உள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் உள்ள முடி செல்கள், மீண்டும் வளர்வதற்கு சமிக்ஞை தரும் புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், அவை ஏனோ, முடி செல்கள் வளர்வதற்கு சமிக்ஞை தராமலேயே இருக்கின்றன. அந்த செல்களுக்கு துாண்டுதல் தந்த போது, அவை மீண்டும் வளர ஆரம்பித்தன.

எலிகளின் மீதான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இழந்த செவி கேட்கும் திறனை மீட்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதே போன்ற ஆய்வை செவித் திறனை இழந்தோர் மீது விரைவில் அவர்கள் துவங்கி வெற்றி கண்டால், காது கேளாமையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

No comments:

Post a Comment