FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, October 25, 2018

காது கேளாதவர்களுக்கான ஆசிய அழகி போட்டியில் பட்டம் வென்ற இந்திய அழகி!!!

காது கேளாதவர்களுக்கான ஆசிய அழகி போட்டியில் பட்டம் வென்ற இந்திய அழகி!!!
24.10.2018 சமீபத்தில் நடைபெற்ற காது கேளாதவர்களுக்கான ஆசிய அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த நிஷ்தா துதேஜா என்ற மாடல், அழகி பட்டம் வென்றுள்ளார்.

உலக அழகி, பிரபஞ்ச அழகி போன்ற போட்டிகளைப் போல, காதுகேளாத பெண்களுக்கான ஆசிய அழகி போட்டி சமீபத்தில் பாராகுவேயில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி அழகிகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த நிஷ்தா துதேஜா அழகி பட்டம் வென்றார். மேலும், இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் நிஷ்தா பெற்றுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிக பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ள நிஷ்தா, விளையாட்டு போட்டிகளிலும் மிகவும் திறமைப்படைத்தவர். இவர் சமீபத்தில் நடந்த காதுகேளாதவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் காதுகேளாதவர்களுக்கான சர்வதேச டென்னீஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment