FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, June 20, 2017

சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ; காதுகேளாத குழந்தைகளுக்கான பொருட்களும் பறிமுதல்

20.06.2017
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதார் பள்ளிக்கு ஜெ.வின் தோழி சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. மேலும், காது கேட்காத குழந்தைகளுக்கு அவர் வழங்கிய கருவிகளுக்கான பணத்தையும் செலுத்தாததால், அந்த கருவிகள் குழந்தைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பின், கடந்த ஜனவரி 17ம் தேதி அவர் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை திறந்து வைத்த அவர், அங்குள்ள காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக கூறி ரூ.10 லட்சத்திற்கான செக் ஒன்றை வழங்கினார். மேலும், அங்குள்ள 240 குழந்தைகளுக்கும் ரூ.19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த செக்கை, அந்த பள்ளியை நடத்தி வரும் லதா ராஜேந்திரன் வங்கியில் டெபாசிட் செய்தார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக் திரும்பி வந்து விட்டது. இதனால் லதா ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அதோடு, சசிகலா வழங்கிய காது கேட்கும் கருவிகளுக்கு உரிய பணத்தையும் சசிகலா தரப்பு தரவில்லை எனத் தெரிகிறது. அந்த கருவிகளுக்கான பணத்தை பெற எவ்வளவு முயன்றும் பெற முடியாததால் வெறுத்துப்பொன அந்த நிறுவனம், காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து அந்த குழந்தைகளிடம் இருந்து அந்த கருவிகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment