FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, June 20, 2017

சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ; காதுகேளாத குழந்தைகளுக்கான பொருட்களும் பறிமுதல்

20.06.2017
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதார் பள்ளிக்கு ஜெ.வின் தோழி சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. மேலும், காது கேட்காத குழந்தைகளுக்கு அவர் வழங்கிய கருவிகளுக்கான பணத்தையும் செலுத்தாததால், அந்த கருவிகள் குழந்தைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட பின், கடந்த ஜனவரி 17ம் தேதி அவர் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர் சிலை ஒன்றை திறந்து வைத்த அவர், அங்குள்ள காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு உதவுவதாக கூறி ரூ.10 லட்சத்திற்கான செக் ஒன்றை வழங்கினார். மேலும், அங்குள்ள 240 குழந்தைகளுக்கும் ரூ.19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த செக்கை, அந்த பள்ளியை நடத்தி வரும் லதா ராஜேந்திரன் வங்கியில் டெபாசிட் செய்தார். ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக் திரும்பி வந்து விட்டது. இதனால் லதா ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அதோடு, சசிகலா வழங்கிய காது கேட்கும் கருவிகளுக்கு உரிய பணத்தையும் சசிகலா தரப்பு தரவில்லை எனத் தெரிகிறது. அந்த கருவிகளுக்கான பணத்தை பெற எவ்வளவு முயன்றும் பெற முடியாததால் வெறுத்துப்பொன அந்த நிறுவனம், காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து அந்த குழந்தைகளிடம் இருந்து அந்த கருவிகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றுவிட்டது.

இதனால் அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment