FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, June 1, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபர்கள்!


மணப்பாறை அருகே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் இருவர் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமை வாய் பேச முடியாத பெண் தனது தம்பியுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.

அவர் சைகையில் தெரிவித்த தகவல்கள் போலீசாருக்கு புரியாததால் காவல்துறையினரால் புகார் எடுக்க முடியவில்லை. இதையடுத்து காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமாக புகார் பெறப்பட்டது.

அந்த புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவின்போது இரண்டு பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காவல்ஆய்வாளர் வாசுகி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment