FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 1, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபர்கள்!


மணப்பாறை அருகே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் இருவர் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமை வாய் பேச முடியாத பெண் தனது தம்பியுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.

அவர் சைகையில் தெரிவித்த தகவல்கள் போலீசாருக்கு புரியாததால் காவல்துறையினரால் புகார் எடுக்க முடியவில்லை. இதையடுத்து காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமாக புகார் பெறப்பட்டது.

அந்த புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவின்போது இரண்டு பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காவல்ஆய்வாளர் வாசுகி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment