FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, June 1, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபர்கள்!


மணப்பாறை அருகே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் இருவர் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமை வாய் பேச முடியாத பெண் தனது தம்பியுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.

அவர் சைகையில் தெரிவித்த தகவல்கள் போலீசாருக்கு புரியாததால் காவல்துறையினரால் புகார் எடுக்க முடியவில்லை. இதையடுத்து காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமாக புகார் பெறப்பட்டது.

அந்த புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவின்போது இரண்டு பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காவல்ஆய்வாளர் வாசுகி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment