FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, June 1, 2017

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த மர்ம நபர்கள்!


மணப்பாறை அருகே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் இருவர் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த புதன்கிழமை வாய் பேச முடியாத பெண் தனது தம்பியுடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.

அவர் சைகையில் தெரிவித்த தகவல்கள் போலீசாருக்கு புரியாததால் காவல்துறையினரால் புகார் எடுக்க முடியவில்லை. இதையடுத்து காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலமாக புகார் பெறப்பட்டது.

அந்த புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை கோவில் திருவிழாவின்போது இரண்டு பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை காவல்ஆய்வாளர் வாசுகி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். பெண் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment