FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, June 1, 2017

மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினியில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

31.05.2017
திருச்சி: டிஆர்ஓ தர்ப்பகராஜிடம் தேசிய பார் வையற்றோர் சம்மேளன நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினி யில் பதிவு செய்து கொள்ள ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி இலவசமாக பதிவு செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மிக குறைந்த தொகையான ரூ.20க்கு மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பதிவு செய்ய இ சேவை மையத்திற்கு உத்தரவிட வேண்டும். குறைதீர்நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள் தொடர்பான 174 மனுக்கள், குடும்ப அட்டை தொடர் பான 21மனு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, மாற்று திறனா ளிகள், விதவை உதவித் தொகை கோரி 37மனு, வேலைவாய்ப்பு தொடர்பான 19 மனு, தெருவிளக்கு, பஸ் வசதி, இதர அடிப்படை வசதிகள் கோரி 44 மனு, புகார் தொடர்பான 14 மனு, கல்வி உதவித் தொகை, வங்கி கடன், இதர கடன் 11 மனு, திருமண உதவித் தொகை, சலவை பெட்டி தொடர்பான 12, பென்சன், நிலுவைத் தொகை தொடர்பான 7 மற்றும் 101 இதர மனுக்கள் சேர்த்து 440 மனுக்கள் பெறப் பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment