FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 1, 2017

மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினியில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

31.05.2017
திருச்சி: டிஆர்ஓ தர்ப்பகராஜிடம் தேசிய பார் வையற்றோர் சம்மேளன நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினி யில் பதிவு செய்து கொள்ள ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி இலவசமாக பதிவு செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மிக குறைந்த தொகையான ரூ.20க்கு மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பதிவு செய்ய இ சேவை மையத்திற்கு உத்தரவிட வேண்டும். குறைதீர்நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள் தொடர்பான 174 மனுக்கள், குடும்ப அட்டை தொடர் பான 21மனு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, மாற்று திறனா ளிகள், விதவை உதவித் தொகை கோரி 37மனு, வேலைவாய்ப்பு தொடர்பான 19 மனு, தெருவிளக்கு, பஸ் வசதி, இதர அடிப்படை வசதிகள் கோரி 44 மனு, புகார் தொடர்பான 14 மனு, கல்வி உதவித் தொகை, வங்கி கடன், இதர கடன் 11 மனு, திருமண உதவித் தொகை, சலவை பெட்டி தொடர்பான 12, பென்சன், நிலுவைத் தொகை தொடர்பான 7 மற்றும் 101 இதர மனுக்கள் சேர்த்து 440 மனுக்கள் பெறப் பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment