FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, June 1, 2017

மார்க் குறைவால் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவிக்கு சீட் மறுப்பு… டெய்லரிங் படிக்கச் சொன்ன அடாவடி பள்ளி!

26.05.2017
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற்றுத்திறனாளி மாணவியை தையல் வேலைக்கு அனுப்புமாறும் தனியார் பள்ளி பிளஸ் 1 சீட் தர மறுத்துள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த ரம்யா செவித்திறன் குறைபாடுள்ள மாணவி. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எண்ணூரில் உள்ள புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ரம்யாவின் தந்தை இளமுருகன் மற்றும் தாய் கீதா கூலித் தொழிலாளர்கள். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 309 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள ரம்யா பதினோறாம் வகுப்பில் சேர அதே பள்ளியை அணுகியுள்ளார்.

பள்ளி மறுப்பு 

ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பம் தர உதவி தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய பாடத்திட்டம் ரம்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடாவடி பதில்

மேலும் ரம்யாவிற்கு படிப்பு வராது, அவளை தையல் கிளாஸ் அல்லது வேறு ஏதேனும் கைத்தொழிலில் சேர்த்த விடுங்கள் என்று கூறியுள்ளார் உதவி ஆசிரியை. இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீருடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.

விடாத நற்பெயர் மோகம் 

மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாது என்று ரேங்க் முறையை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்து அரசு ரத்து செய்தது. ஆனால் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் அவர்களுக்கு கல்வியறிவை புகட்டாமல் மறுபடியும் மதிப்பெண்ணையே மையப்படுத்துவது ஏன் என்பது தான் புரியவில்லை.

மாற வேண்டும் 

என்ன செய்தாலும் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடும் என்ற போக்கை தனியார் பள்ளிகள் எப்போது தான் கைவிடுமோ தெரியவில்லை. சிறு விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை புரிந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு சீட் தர முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment