FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, June 1, 2017

மார்க் குறைவால் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவிக்கு சீட் மறுப்பு… டெய்லரிங் படிக்கச் சொன்ன அடாவடி பள்ளி!

26.05.2017
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற்றுத்திறனாளி மாணவியை தையல் வேலைக்கு அனுப்புமாறும் தனியார் பள்ளி பிளஸ் 1 சீட் தர மறுத்துள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த ரம்யா செவித்திறன் குறைபாடுள்ள மாணவி. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எண்ணூரில் உள்ள புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ரம்யாவின் தந்தை இளமுருகன் மற்றும் தாய் கீதா கூலித் தொழிலாளர்கள். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 309 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள ரம்யா பதினோறாம் வகுப்பில் சேர அதே பள்ளியை அணுகியுள்ளார்.

பள்ளி மறுப்பு 

ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பம் தர உதவி தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய பாடத்திட்டம் ரம்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடாவடி பதில்

மேலும் ரம்யாவிற்கு படிப்பு வராது, அவளை தையல் கிளாஸ் அல்லது வேறு ஏதேனும் கைத்தொழிலில் சேர்த்த விடுங்கள் என்று கூறியுள்ளார் உதவி ஆசிரியை. இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீருடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.

விடாத நற்பெயர் மோகம் 

மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாது என்று ரேங்க் முறையை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்து அரசு ரத்து செய்தது. ஆனால் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் அவர்களுக்கு கல்வியறிவை புகட்டாமல் மறுபடியும் மதிப்பெண்ணையே மையப்படுத்துவது ஏன் என்பது தான் புரியவில்லை.

மாற வேண்டும் 

என்ன செய்தாலும் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடும் என்ற போக்கை தனியார் பள்ளிகள் எப்போது தான் கைவிடுமோ தெரியவில்லை. சிறு விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை புரிந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு சீட் தர முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment