FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, June 1, 2017

மார்க் குறைவால் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவிக்கு சீட் மறுப்பு… டெய்லரிங் படிக்கச் சொன்ன அடாவடி பள்ளி!

26.05.2017
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற்றுத்திறனாளி மாணவியை தையல் வேலைக்கு அனுப்புமாறும் தனியார் பள்ளி பிளஸ் 1 சீட் தர மறுத்துள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த ரம்யா செவித்திறன் குறைபாடுள்ள மாணவி. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எண்ணூரில் உள்ள புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ரம்யாவின் தந்தை இளமுருகன் மற்றும் தாய் கீதா கூலித் தொழிலாளர்கள். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 309 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள ரம்யா பதினோறாம் வகுப்பில் சேர அதே பள்ளியை அணுகியுள்ளார்.

பள்ளி மறுப்பு 

ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பம் தர உதவி தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய பாடத்திட்டம் ரம்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடாவடி பதில்

மேலும் ரம்யாவிற்கு படிப்பு வராது, அவளை தையல் கிளாஸ் அல்லது வேறு ஏதேனும் கைத்தொழிலில் சேர்த்த விடுங்கள் என்று கூறியுள்ளார் உதவி ஆசிரியை. இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீருடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.

விடாத நற்பெயர் மோகம் 

மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாது என்று ரேங்க் முறையை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்து அரசு ரத்து செய்தது. ஆனால் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் அவர்களுக்கு கல்வியறிவை புகட்டாமல் மறுபடியும் மதிப்பெண்ணையே மையப்படுத்துவது ஏன் என்பது தான் புரியவில்லை.

மாற வேண்டும் 

என்ன செய்தாலும் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடும் என்ற போக்கை தனியார் பள்ளிகள் எப்போது தான் கைவிடுமோ தெரியவில்லை. சிறு விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை புரிந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு சீட் தர முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment