FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, June 21, 2017

காதுகேளாதோர் பள்ளிக்கு 'சீல்' அதிகாரிகள் நடவடிக்கை

21.06.2017
கருமத்தம்பட்டி : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஊராட்சி அனந்தாபுரத்தில், திருப்பூர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ்2 வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மீது, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி தாளாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதிகாரிகள் நடத்திய விசாரணையை அடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க முடிவானது. ஜூன் 20ம் தேதி பள்ளிக்கு 'சீல்' வைக்கப்படும், என்ற மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரின் உத்தரவு பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த, 16ம் தேதி வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று பள்ளிக்கு சென்று, 'சீல்' வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

No comments:

Post a Comment