FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 21, 2017

காதுகேளாதோர் பள்ளிக்கு 'சீல்' அதிகாரிகள் நடவடிக்கை

21.06.2017
கருமத்தம்பட்டி : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஊராட்சி அனந்தாபுரத்தில், திருப்பூர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ்2 வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மீது, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி தாளாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதிகாரிகள் நடத்திய விசாரணையை அடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க முடிவானது. ஜூன் 20ம் தேதி பள்ளிக்கு 'சீல்' வைக்கப்படும், என்ற மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரின் உத்தரவு பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த, 16ம் தேதி வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று பள்ளிக்கு சென்று, 'சீல்' வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

No comments:

Post a Comment