FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, June 21, 2017

காதுகேளாதோர் பள்ளிக்கு 'சீல்' அதிகாரிகள் நடவடிக்கை

21.06.2017
கருமத்தம்பட்டி : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் ஊராட்சி அனந்தாபுரத்தில், திருப்பூர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறு முதல் பிளஸ்2 வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் மீது, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி தாளாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதிகாரிகள் நடத்திய விசாரணையை அடுத்து, பள்ளிக்கு சீல் வைக்க முடிவானது. ஜூன் 20ம் தேதி பள்ளிக்கு 'சீல்' வைக்கப்படும், என்ற மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரின் உத்தரவு பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த, 16ம் தேதி வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், நேற்று பள்ளிக்கு சென்று, 'சீல்' வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.

No comments:

Post a Comment