FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, June 29, 2017

மாற்றுத் திறனாளிகளின் 'சைகை' ஆர்ப்பாட்டம்

29.06.2017, பழநி, பழநியில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் வழங்ககோரிக்கை 'சைகை' முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, வாய்பேச, காதுகேளாதோர் சங்க கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர்.
2, 4 சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்பேச இயலாத, காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னரும் வழங்காமல் உள்ளனர். உடனடியாக ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும் என, வலியுறுத்தி 'சைகை' முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment