FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

16.06.2017
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 முதல் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் வரிகள், மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் அமலில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் ஒரே விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.

இதனால், ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜிஎஸ்டி-க்கு தமிழகம் தயாராகிவிட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மருந்துப் பொருள்களின் விலை கணிசமாக உயர்கிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்மீது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிக்கையில் கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம், ப்ரெய்லி காகிதம், ப்ரெய்லி கடிகாரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, காதுகேள் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோல சென்னை பாரிமுனையிலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், தலைமைத் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

No comments:

Post a Comment