FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

16.06.2017
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 முதல் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் வரிகள், மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் அமலில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் ஒரே விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.

இதனால், ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜிஎஸ்டி-க்கு தமிழகம் தயாராகிவிட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மருந்துப் பொருள்களின் விலை கணிசமாக உயர்கிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்மீது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிக்கையில் கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம், ப்ரெய்லி காகிதம், ப்ரெய்லி கடிகாரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, காதுகேள் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோல சென்னை பாரிமுனையிலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், தலைமைத் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

No comments:

Post a Comment