FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

16.06.2017
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 முதல் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் வரிகள், மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் அமலில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் ஒரே விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.

இதனால், ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜிஎஸ்டி-க்கு தமிழகம் தயாராகிவிட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மருந்துப் பொருள்களின் விலை கணிசமாக உயர்கிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்மீது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிக்கையில் கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம், ப்ரெய்லி காகிதம், ப்ரெய்லி கடிகாரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, காதுகேள் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோல சென்னை பாரிமுனையிலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், தலைமைத் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

No comments:

Post a Comment