FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

16.06.2017
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 முதல் 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, நாடு முழுவதும் மத்திய அரசின் வரிகள், மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பலவிதமான வரிவிதிப்பு முறைகள் அமலில் உள்ளன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் ஒரே விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.

இதனால், ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜிஎஸ்டி-க்கு தமிழகம் தயாராகிவிட்டது. இதன் காரணமாக பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவை மட்டும் அல்லாமல் எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மருந்துப் பொருள்களின் விலை கணிசமாக உயர்கிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள்மீது மத்திய அரசு ஜிஎஸ்டி அறிக்கையில் கூடுதல் வரி விதித்துள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ப்ரெய்லி தட்டச்சு இயந்திரம், ப்ரெய்லி காகிதம், ப்ரெய்லி கடிகாரம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், சக்கர நாற்காலி, காதுகேள் இயந்திரம், ஊன்றுகோல் ஆகியவைமீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது, பொருளாதார ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்யக் கோரி, மாற்றுத் திறனாளிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோல சென்னை பாரிமுனையிலும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், தலைமைத் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

No comments:

Post a Comment