FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, June 17, 2017

மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: உ.பி. அரசு அதிரடி

15.06.2017
மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய உத்தரப்பிரதேசம் மாநில அரசு தீர்மானித்துள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடன் தொகையில் 1.60 கோடி ரூபாய் வரை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளனர். நிலுவை தொகையான 3.88 கோடி ரூபாயை இன்னும் 100 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய அரசு தீர்மானித்துள்ளது என அம்மாநில மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி ஓம்பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகையை 300 ரூபயில் இருந்து 500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வங்கிக் கடன் தொகையை 30 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். இவர்களுக்கான திருமண உதவித் தொகையும் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக அளிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த வாகனங்களுடன் காய்கறி, பழங்களை கொண்டு சென்று விற்கும் இணைப்பு மேடையும் இருக்கும். பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் சிறு, குறு தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள். மேலும், மத்திய திறன் மேம்பாட்டு இலக்கு திட்டத்திலும் இவர்கள் இடம் பெறுவார்கள்.

இதுவரை மாநிலத்துக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி சீட்டு அளிக்கப்பட்டு வந்தது. இனி வெளி மாநிலங்களுக்கு செல்லும் உத்தரப்பிரதேசம் மாநில பேருந்துகளிலும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment