FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 17, 2017

மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: உ.பி. அரசு அதிரடி

15.06.2017
மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய உத்தரப்பிரதேசம் மாநில அரசு தீர்மானித்துள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடன் தொகையில் 1.60 கோடி ரூபாய் வரை அவர்கள் திருப்பி செலுத்தியுள்ளனர். நிலுவை தொகையான 3.88 கோடி ரூபாயை இன்னும் 100 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய அரசு தீர்மானித்துள்ளது என அம்மாநில மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி ஓம்பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகையை 300 ரூபயில் இருந்து 500 ரூபாயாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வங்கிக் கடன் தொகையை 30 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். இவர்களுக்கான திருமண உதவித் தொகையும் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக அளிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த வாகனங்களுடன் காய்கறி, பழங்களை கொண்டு சென்று விற்கும் இணைப்பு மேடையும் இருக்கும். பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் சிறு, குறு தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளும் இணைக்கப்படுவார்கள். மேலும், மத்திய திறன் மேம்பாட்டு இலக்கு திட்டத்திலும் இவர்கள் இடம் பெறுவார்கள்.

இதுவரை மாநிலத்துக்குள் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி சீட்டு அளிக்கப்பட்டு வந்தது. இனி வெளி மாநிலங்களுக்கு செல்லும் உத்தரப்பிரதேசம் மாநில பேருந்துகளிலும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment