FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, June 1, 2017

காது கேளாத வாய் பேசமுடியாத பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை!

01.06.2017
வாயில் துணியை அமுக்கி மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி (காது கேளாத வாய் பேசமுடியாத) பெண், முத்துலெட்சுமி (35). பெற்றோர் இல்லாத இவர், சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர், முத்துலெட்சுமியின் வாயில் துணியை அமுக்கி, முட்புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இப்பிரச்சினையை கையிலெடுத்த பின்னர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. பாதிக்கபட்ட பெண் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment