FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 1, 2017

காது கேளாத வாய் பேசமுடியாத பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை!

01.06.2017
வாயில் துணியை அமுக்கி மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி (காது கேளாத வாய் பேசமுடியாத) பெண், முத்துலெட்சுமி (35). பெற்றோர் இல்லாத இவர், சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர், முத்துலெட்சுமியின் வாயில் துணியை அமுக்கி, முட்புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இப்பிரச்சினையை கையிலெடுத்த பின்னர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. பாதிக்கபட்ட பெண் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment