FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, June 1, 2017

காது கேளாத வாய் பேசமுடியாத பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை!

01.06.2017
வாயில் துணியை அமுக்கி மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி (காது கேளாத வாய் பேசமுடியாத) பெண், முத்துலெட்சுமி (35). பெற்றோர் இல்லாத இவர், சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார். இவர் கடந்த 26ம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர், முத்துலெட்சுமியின் வாயில் துணியை அமுக்கி, முட்புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இப்பிரச்சினையை கையிலெடுத்த பின்னர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. பாதிக்கபட்ட பெண் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment