FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, June 29, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஜூலை 6ம் தேதி தொடங்குகிறது

29.06.2017, சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி, சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜூலை 6ம்தேதி தொடங்கி, 21ம் தேதிவரை நடக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பிறந்தது முதல் 18 வயது கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இந்த முகாம், நடைபெறவுள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, காது கேளாத மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பொது மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், சிஇஓ ஞானகவுரி, திட்டஅலுவலர் ஈஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment