FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, June 29, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஜூலை 6ம் தேதி தொடங்குகிறது

29.06.2017, சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி, சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜூலை 6ம்தேதி தொடங்கி, 21ம் தேதிவரை நடக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பிறந்தது முதல் 18 வயது கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இந்த முகாம், நடைபெறவுள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, காது கேளாத மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பொது மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், சிஇஓ ஞானகவுரி, திட்டஅலுவலர் ஈஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment