FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, June 29, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஜூலை 6ம் தேதி தொடங்குகிறது

29.06.2017, சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி, சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜூலை 6ம்தேதி தொடங்கி, 21ம் தேதிவரை நடக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பிறந்தது முதல் 18 வயது கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இந்த முகாம், நடைபெறவுள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, காது கேளாத மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பொது மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், சிஇஓ ஞானகவுரி, திட்டஅலுவலர் ஈஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment