FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, June 23, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி

23.06.2017
அன்புள்ள ஜெயமோகன்.,

நேற்றைக்கு திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை மூடி சீல் வைக்க அரசு முயன்றிருக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேற முடியாது என்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

பாலியல் புகாரின் நோக்கமே அந்தத் தாளாளர் வாய் திறக்க முடியாதபடிக்கு கூனி நிற்கச் செய்ய வேண்டித்தான்; உலகமும் அதை நம்பத் தயாராகத் தான் இருக்கும். இந்நிலையில் புகாரை மறுத்துக் குழந்தைகளே போராடியிருப்பதில் கொஞ்சம் நிம்மதி.

ஊர் ஊமையானதால்; அந்தக் குழந்தைகள் பேசிவிட்டன. இப்போது ஊர் செவிடுமாகிவிட்டது. இனி அறங்கூற்றாகுமெனக் காத்திருக்க வேண்டியதுதான் அல்லவா!?

ராஜன் ராதாமணாளன்.


அன்புள்ள ராஜன்

உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கறாராகப்பார்த்தால் இதுவரை என்ன நடந்துள்ளது? பற்பல ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளியில் படித்த ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். எந்த ஆதாரமும் அதற்கு இல்லை. நீதிமன்றத்தில் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. ஒரு வழக்கு மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் அதைப்பயன்படுத்தி திரு முருகசாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்களுக்கு ஒரு கூட்டம் நேரடியாகச் சென்று அந்த காட்சிகளை வழங்கி அவை தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும்படிச் செய்திருக்கிறார்கள்.

அதன்பின் அங்கே பணியாற்றுபவர்களிடமும் குழந்தைகளிடமும் குற்றச்சாட்டு கூறும்படி வலியுறுத்துகிறார்கள். அப்படி குற்றச்சாட்டுகள் எழாதபோது குழந்தைகளை அழைத்துச்செல்லும்படி பெற்றோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படியும் பெரும்பாலான குழந்தைகள் எஞ்சவே வலுக்கட்டாயமாக பள்ளியைப் பூட்ட முயல்கிறார்கள். வெறும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் முப்பதாண்டுக்கால வரலாறும் பலருடைய தியாயங்களும் கொண்டு வளர்ந்த ஒரு நிறுவனம் முற்றாக அழிக்கப்படுகிறது.

ஏன் என்றால் அந்த நிலம். அது ஒருகாலத்தில் பொட்டல். இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ளது. அவ்வாறு மதிப்புக்குரியதாக அது ஆனதே அப்பள்ளியால்தான். அப்பள்ளி முருகசாமியின் சொத்து அல்ல. ஏராளமான மக்களின் நன்கொடை அதில் உள்ளது. என் நன்கொடையும் ஒரு சிறு துளி உள்ளதனால் இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இன்று அதை ஒரு குடும்பச் சொத்தாக எடுத்துக்கொள்ளும் முயற்சி நிகழ்கிறது.

குறைந்தபட்சம் அப்பள்ளி திருப்பூரின் சொத்து என்றாவது மக்கள் நினைக்கவேண்டும். அதை அரசியல்வாதிகள் சூறையாட அவர்கள் அனுமதிக்கலாகாது. அதை சம்பந்தமில்லாதவர்கள் எவ்வகையில் எடுத்துக்கொண்டாலும் அதை அழிப்பார்கள். ஏனென்றால் அந்த நிலம் மட்டுமே அவர்களின் இலக்கு. அப்பள்ளி அதை உருவாக்கிய முருகசாமியால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதன் அன்றாடச்செயல்பாடுகளில் எவரும் தலையிடக்கூடாது

உண்மையில் முருகசாமி அவர்கள்மேல் ஐயம் இருக்குமென்றால் அவருக்குமேல் அவரைக் கண்காணிக்கும்படி பொதுமக்கள் அடங்கிய ஒரு சிறுகுழுவை நியமிக்கலாம். அவர் சட்டவிரோதமாக ஏதேனும் செய்கிறாரா என கண்காணிக்கலாம். சட்டபூர்வமாகவே அப்படி அமைக்க நீதிமன்றம் ஆணையிடலாம்.

ஆனால் ஆரம்பம் முதலே மிகமிக ஒருதலைப்பட்சமாக, உள்நோக்குடன் அனைத்து அரசுசார் அமைப்புக்களும் செயல்படுகின்றனவா என ஐயம் இருக்கிறது. அந்நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன.

சோர்வூட்டும் ஒரு நிலை. அதற்குப்பின்னாலிருப்பவை இரண்டு மனநிலைகள். பொதுச்சொத்து என்பது சொந்த மரம், வெட்டி வீழ்த்தி அள்ளித்தின்னவேண்டியதுதான் என்னும் உறவினர்களின் மனநிலை. எந்த அவதூறையும் உடனடியாக வம்புப்பேச்சாக மாற்றி ரசிக்கும், எந்தப்பொதுவிஷயத்திலும் ஈடுபடத் தயங்கும் மக்கள்

திருப்பூரில் ஒரு மக்கள்குழு அமைந்து இந்தவிஷயத்தில் தலையிடவேண்டும். அப்பள்ளியை அழிக்க அவர்கள் அனுமதித்தால் அது அவர்களை மொண்ணைகள் என்றுதான் உலகுக்குக் காட்டும்

ஜெ

No comments:

Post a Comment