FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, June 22, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி இடமாற்றம்.... மாணவர்களின் போராட்ட விளைவு!

21.06.2017
திருப்பூர் மாவட்டம் கோதம்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது திருப்பூர் காது கேளாதோர் பள்ளி. இப்பள்ளியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த மே மாதம் இப்பள்ளியின் தாளாளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இப்பள்ளிக்கு வந்த அரசு அதிகாரிகள், குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு பள்ளியை மூட முயன்றிருக்கிறார்கள். ஆனால், பள்ளியை விட்டு போக மறுத்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் பயிலும் சிறுமி சுகுணாவின் தந்தை சின்னசாமி கூறுகையில் "ஒண்ணாவதுல இருந்து என் புள்ள இந்த ஸ்கூல்லதான் படிக்குது. வாரம் ஒரு தடவை வந்து பாத்துட்டுப்போவேன். இதுவரை என் பொண்ணு எந்தக் குறையும் சொன்னது இல்ல. போன வெள்ளிக்கிழமைல இருந்து என் பொண்ணைக் கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையா கூப்பிட்டு கேளுங்க, ஒரு குழந்தை இந்தப் பள்ளியை பத்தி தப்பா சொல்லிட்டாலும் நாங்க எங்க குழந்தைகளை கூப்பிட்டுப் போறோம். ஆனால், அவங்ககிட்ட கேட்க அரசு அதிகாரிகள் யாரும் தயாரா இல்லை. காலைல இருந்து யாரும் சாப்பிடல. அதைப்பத்தி எந்தக் கவலையும் அரசுக்கு இல்ல. அரசு அதிகாரிகளுக்கும் இல்லை. என் பொண்ணோட மொழி தெரியாம நான் வீட்டுக்குக் கூட்டிட்டு போய் என்ன பண்றதுனு தெரியல" என்கிறார் வேதனையோடு.

சிறுவன் அதியமான் என்பவரது பெற்றோரிடம் கேட்டதற்கு " என்னோட பையன் இப்போ பத்தாவது படிக்கிறான். அவனை ரெண்டு வயசுல இங்க கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். இன்னைக்கு அவன் நல்லா படிக்கிறான். இங்க படிக்கிற 100 குழந்தைகளும் அப்படித்தான் இங்க படிக்கிறாங்க. ரெண்டு நாளா பயங்கரமான மனப் போராட்டத்துல இருக்காங்க, தூக்கம் இல்ல, சாப்பாடு இல்ல. யாரும் இந்தப் பள்ளி கூடத்தை விட்டுப் போக மாட்டேன்னு உறுதியா இருக்காங்க. சின்ன வயசுல தமிழ்நாட்ல காதுகேளாதோர் பள்ளியில் இந்தப் பள்ளிக்கூடம் தான் முன்னிலைல இருக்கு. இந்த ஸ்கூல்ல காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் இருக்கு. என்னோட பையன் இங்க தான் படிப்பான். நாங்க வேற எங்கயும் கொண்டு போய் சேர்க்க முடியாது. அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். அதுவரை யாரும் பள்ளியை விட்டுப் போக மாட்டோம்’’ என்கிறார்.

பள்ளியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மூடக் கூடாது என நீதி மன்றத்தில் தடை உத்தரவு கோரி நேற்று (20/06/2017) மனு அளித்திருக்கிறார்கள். அதன் மீதான விசாரணை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளியை மூட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதியினரும் விரும்புகின்றனர்.

பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளியிலிருந்து செல்வதற்குத் தயாராக இல்லை. சாப்பிடவும் மறுக்கிறார்கள். இப்போது வரை மண் தரையில் அமர்ந்து, சைகை மொழியில் "நாங்கள் போக மாட்டோம்" என ஒரு சேர அவர்கள் போராடுவது அரசுக்காகவோ, அப்பள்ளிக்காகவோ அல்ல, அவர்களின் எதிர்காலத்திற்காக. என்ன செய்ய போகிறது அரசு?


No comments:

Post a Comment