FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 22, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி இடமாற்றம்.... மாணவர்களின் போராட்ட விளைவு!

21.06.2017
திருப்பூர் மாவட்டம் கோதம்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது திருப்பூர் காது கேளாதோர் பள்ளி. இப்பள்ளியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த மே மாதம் இப்பள்ளியின் தாளாளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இப்பள்ளிக்கு வந்த அரசு அதிகாரிகள், குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு பள்ளியை மூட முயன்றிருக்கிறார்கள். ஆனால், பள்ளியை விட்டு போக மறுத்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் பயிலும் சிறுமி சுகுணாவின் தந்தை சின்னசாமி கூறுகையில் "ஒண்ணாவதுல இருந்து என் புள்ள இந்த ஸ்கூல்லதான் படிக்குது. வாரம் ஒரு தடவை வந்து பாத்துட்டுப்போவேன். இதுவரை என் பொண்ணு எந்தக் குறையும் சொன்னது இல்ல. போன வெள்ளிக்கிழமைல இருந்து என் பொண்ணைக் கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையா கூப்பிட்டு கேளுங்க, ஒரு குழந்தை இந்தப் பள்ளியை பத்தி தப்பா சொல்லிட்டாலும் நாங்க எங்க குழந்தைகளை கூப்பிட்டுப் போறோம். ஆனால், அவங்ககிட்ட கேட்க அரசு அதிகாரிகள் யாரும் தயாரா இல்லை. காலைல இருந்து யாரும் சாப்பிடல. அதைப்பத்தி எந்தக் கவலையும் அரசுக்கு இல்ல. அரசு அதிகாரிகளுக்கும் இல்லை. என் பொண்ணோட மொழி தெரியாம நான் வீட்டுக்குக் கூட்டிட்டு போய் என்ன பண்றதுனு தெரியல" என்கிறார் வேதனையோடு.

சிறுவன் அதியமான் என்பவரது பெற்றோரிடம் கேட்டதற்கு " என்னோட பையன் இப்போ பத்தாவது படிக்கிறான். அவனை ரெண்டு வயசுல இங்க கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். இன்னைக்கு அவன் நல்லா படிக்கிறான். இங்க படிக்கிற 100 குழந்தைகளும் அப்படித்தான் இங்க படிக்கிறாங்க. ரெண்டு நாளா பயங்கரமான மனப் போராட்டத்துல இருக்காங்க, தூக்கம் இல்ல, சாப்பாடு இல்ல. யாரும் இந்தப் பள்ளி கூடத்தை விட்டுப் போக மாட்டேன்னு உறுதியா இருக்காங்க. சின்ன வயசுல தமிழ்நாட்ல காதுகேளாதோர் பள்ளியில் இந்தப் பள்ளிக்கூடம் தான் முன்னிலைல இருக்கு. இந்த ஸ்கூல்ல காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் இருக்கு. என்னோட பையன் இங்க தான் படிப்பான். நாங்க வேற எங்கயும் கொண்டு போய் சேர்க்க முடியாது. அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். அதுவரை யாரும் பள்ளியை விட்டுப் போக மாட்டோம்’’ என்கிறார்.

பள்ளியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மூடக் கூடாது என நீதி மன்றத்தில் தடை உத்தரவு கோரி நேற்று (20/06/2017) மனு அளித்திருக்கிறார்கள். அதன் மீதான விசாரணை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளியை மூட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதியினரும் விரும்புகின்றனர்.

பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளியிலிருந்து செல்வதற்குத் தயாராக இல்லை. சாப்பிடவும் மறுக்கிறார்கள். இப்போது வரை மண் தரையில் அமர்ந்து, சைகை மொழியில் "நாங்கள் போக மாட்டோம்" என ஒரு சேர அவர்கள் போராடுவது அரசுக்காகவோ, அப்பள்ளிக்காகவோ அல்ல, அவர்களின் எதிர்காலத்திற்காக. என்ன செய்ய போகிறது அரசு?


No comments:

Post a Comment