FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, June 22, 2017

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி இடமாற்றம்.... மாணவர்களின் போராட்ட விளைவு!

21.06.2017
திருப்பூர் மாவட்டம் கோதம்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது திருப்பூர் காது கேளாதோர் பள்ளி. இப்பள்ளியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த மே மாதம் இப்பள்ளியின் தாளாளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக இப்பள்ளிக்கு வந்த அரசு அதிகாரிகள், குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டு பள்ளியை மூட முயன்றிருக்கிறார்கள். ஆனால், பள்ளியை விட்டு போக மறுத்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் பயிலும் சிறுமி சுகுணாவின் தந்தை சின்னசாமி கூறுகையில் "ஒண்ணாவதுல இருந்து என் புள்ள இந்த ஸ்கூல்லதான் படிக்குது. வாரம் ஒரு தடவை வந்து பாத்துட்டுப்போவேன். இதுவரை என் பொண்ணு எந்தக் குறையும் சொன்னது இல்ல. போன வெள்ளிக்கிழமைல இருந்து என் பொண்ணைக் கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க. இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தையா கூப்பிட்டு கேளுங்க, ஒரு குழந்தை இந்தப் பள்ளியை பத்தி தப்பா சொல்லிட்டாலும் நாங்க எங்க குழந்தைகளை கூப்பிட்டுப் போறோம். ஆனால், அவங்ககிட்ட கேட்க அரசு அதிகாரிகள் யாரும் தயாரா இல்லை. காலைல இருந்து யாரும் சாப்பிடல. அதைப்பத்தி எந்தக் கவலையும் அரசுக்கு இல்ல. அரசு அதிகாரிகளுக்கும் இல்லை. என் பொண்ணோட மொழி தெரியாம நான் வீட்டுக்குக் கூட்டிட்டு போய் என்ன பண்றதுனு தெரியல" என்கிறார் வேதனையோடு.

சிறுவன் அதியமான் என்பவரது பெற்றோரிடம் கேட்டதற்கு " என்னோட பையன் இப்போ பத்தாவது படிக்கிறான். அவனை ரெண்டு வயசுல இங்க கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். இன்னைக்கு அவன் நல்லா படிக்கிறான். இங்க படிக்கிற 100 குழந்தைகளும் அப்படித்தான் இங்க படிக்கிறாங்க. ரெண்டு நாளா பயங்கரமான மனப் போராட்டத்துல இருக்காங்க, தூக்கம் இல்ல, சாப்பாடு இல்ல. யாரும் இந்தப் பள்ளி கூடத்தை விட்டுப் போக மாட்டேன்னு உறுதியா இருக்காங்க. சின்ன வயசுல தமிழ்நாட்ல காதுகேளாதோர் பள்ளியில் இந்தப் பள்ளிக்கூடம் தான் முன்னிலைல இருக்கு. இந்த ஸ்கூல்ல காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் இருக்கு. என்னோட பையன் இங்க தான் படிப்பான். நாங்க வேற எங்கயும் கொண்டு போய் சேர்க்க முடியாது. அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். அதுவரை யாரும் பள்ளியை விட்டுப் போக மாட்டோம்’’ என்கிறார்.

பள்ளியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மூடக் கூடாது என நீதி மன்றத்தில் தடை உத்தரவு கோரி நேற்று (20/06/2017) மனு அளித்திருக்கிறார்கள். அதன் மீதான விசாரணை நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் பள்ளியை மூட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதியினரும் விரும்புகின்றனர்.

பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் யாரும் பள்ளியிலிருந்து செல்வதற்குத் தயாராக இல்லை. சாப்பிடவும் மறுக்கிறார்கள். இப்போது வரை மண் தரையில் அமர்ந்து, சைகை மொழியில் "நாங்கள் போக மாட்டோம்" என ஒரு சேர அவர்கள் போராடுவது அரசுக்காகவோ, அப்பள்ளிக்காகவோ அல்ல, அவர்களின் எதிர்காலத்திற்காக. என்ன செய்ய போகிறது அரசு?


No comments:

Post a Comment