FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, June 22, 2017

சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்


22.06.2017, தேனி, சுற்றுலா வளர்ச்சி கழகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து மாவட்ட ஆரம்ப கால பயற்சி மையங்களில் பயிற்சி பெறும் மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பேச இயலாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், சிறப்பாசிரியர்கள் என 40 பேர் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவு கட்டணம், சிற்றுண்டி ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செலவிட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா செல்வதால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்து சகஜமாக பழகும் திறன் வளரும், தன்னம்பிக்கை ஏற்படும் என சிறப்பு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை கலெக்டர் வெங்கடாசலம் வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள்துறை நல அலுவலர் ஜெயசீலி , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment