FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, June 1, 2017

மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் மாற்றம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் பழனிசாமி!

30.05.2017
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாற்றுத்திறனாளிகளை அரசுப் பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1981ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. அவற்றில், பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு, தலா ஒரு சதவிகித பணியிடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு பயன்பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் நான்கு சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை, 4 சதவிகிதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவிகித ஒதுக்கீட்டில், பார்வைக் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவிகிதம். செவித்திறன் குறைபாடுடையோருக்கு ஒரு சதவிகிதம்.

கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

புற உலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் (செவித்திறன் குறைபாடு
மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவிகித இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment