FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, June 1, 2017

மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் மாற்றம்... அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் பழனிசாமி!

30.05.2017
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாற்றுத்திறனாளிகளை அரசுப் பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1981ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. அவற்றில், பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு, தலா ஒரு சதவிகித பணியிடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு பயன்பெற்றுவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் நான்கு சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை, 4 சதவிகிதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவிகித ஒதுக்கீட்டில், பார்வைக் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவிகிதம். செவித்திறன் குறைபாடுடையோருக்கு ஒரு சதவிகிதம்.

கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

புற உலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் (செவித்திறன் குறைபாடு
மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவிகிதம்.

இதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவிகித இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment