FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, June 1, 2017

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காது கேளாத வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண்!

திருச்சி: மணப்பாறை அருகே மாற்றுத்திறனாளி பெண் 
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31.05.2017
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த (காது கேளாத வாய் பேசமுடியாத) மாற்றுத்திறனாளி முத்துலெட்சுமி (வயது 35). பெற்றோர் இல்லாத இவர் இவரது சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார்.

கடந்த 26ஆம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் முத்துலெட்சுமியை வாயில் துணியை வைத்து முட்புதருக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக அறிந்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் இணைந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கபட்ட பெண்ணை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ள நிலையில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment