FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, June 1, 2017

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காது கேளாத வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண்!

திருச்சி: மணப்பாறை அருகே மாற்றுத்திறனாளி பெண் 
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31.05.2017
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த (காது கேளாத வாய் பேசமுடியாத) மாற்றுத்திறனாளி முத்துலெட்சுமி (வயது 35). பெற்றோர் இல்லாத இவர் இவரது சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார்.

கடந்த 26ஆம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் முத்துலெட்சுமியை வாயில் துணியை வைத்து முட்புதருக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக அறிந்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் இணைந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கபட்ட பெண்ணை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ள நிலையில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment