FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, June 1, 2017

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காது கேளாத வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண்!

திருச்சி: மணப்பாறை அருகே மாற்றுத்திறனாளி பெண் 
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31.05.2017
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நல்லியம்பட்டியைச் சேர்ந்த (காது கேளாத வாய் பேசமுடியாத) மாற்றுத்திறனாளி முத்துலெட்சுமி (வயது 35). பெற்றோர் இல்லாத இவர் இவரது சகோதரி மற்றும் சகோதரர் பராமரிப்பில் உள்ளார்.

கடந்த 26ஆம் தேதி அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் முத்துலெட்சுமியை வாயில் துணியை வைத்து முட்புதருக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக அறிந்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் இணைந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கபட்ட பெண்ணை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ள நிலையில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண் மர்மநபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment