FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, June 10, 2017

‘இதுதான் ஒரே நாடு; ஒரே வரி கொள்கையா?’ - ஜி.எஸ்.டியால் மிரளும் மாற்றுத் திறனாளிகள்

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட உள்ளன. வரி விலக்கு உள்ள பொருள்களும் சில இருக்கின்றன. ஜி.எஸ்.டி. வரியால் ஸ்மார்ட் போன்கள், மருந்து உபகரணங்கள், சிமென்ட் ஆகியவற்றின் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி வரியால் இதுவரை வரிவிலக்கில் இடம் பெற்றிருந்த மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு, வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் மாற்றுத் திறனாளிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்திருந்தவரை, மத்திய அரசின், ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்ற அடைமொழியுடன் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டியை கடுமையாக எதிர்த்தார். அவருடைய இறப்புக்குப் பின்பு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைந்த தமிழக அரசும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அரசும் மத்திய அரசின் நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், இந்த வரி விதிப்பில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான தகவல்களையும் வரி விதிப்பு முறைகளையும் தமிழக அரசு ஆராய்ந்து சம்மதம் தெரிவித்ததா என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது. காரணம், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 18-ம் தேதி நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில், வரி வதிப்பு விகிதங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, 'பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்ல் (Braille) கடிகாரங்கள், ப்ரெய்ல் பேப்பர் மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ப்ரெய்ல் டைப் ரைட்டர்களுக்கு 18 சதவிகித வரியும் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வீல் சேர்களுக்கும் அவர்களைக் கொண்டு செல்ல உதவும் மற்ற உபகரணங்களுக்கும் 5 சதவிகித வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் கார்களுக்கு 18 சதவிகிதம் வரையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத் திறனாளிகள் பிரயோகிக்கும் பிற உபகரணங்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பு இருக்கும்' என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரி முறையைக் கண்டித்து, 15-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ‘தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்’ (TARATDAC) போராட்டத்தை நடத்த உள்ளது. இதுகுறித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதனிடம் கேட்ட போது, "மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து பொருள்கள் மற்றும் உபகரணங்களுக்கும் பல்வேறு வகைகளில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், முதன்முறையாக 18 சதவிகிதம் வரை வரி விதிப்பு முறையை அமலுக்குக் கொண்டு வர இருக்கிறது மத்திய அரசு. தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் இந்த வரி விதிப்பானது மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. யாருடைய முதுகுத் தண்டை உடைப்பதற்கு இந்த வரி விதிப்பு? மாற்றுத் திறனாளிகளுக்கான ஐ.நா சபை உரிமை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், இவர்கள் என்ன செய்கிறார்கள்? மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் சலுகைகளை மேலும் மோசமாக்குகிறார்கள். நகரங்களில் கூட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான பேருந்துகளோ, நடைபாதைகளோ கிடையாது. மாற்றுத் திறனாளிகள் சுலபமாக சென்று வருவதற்கு வசதியான அரசு கட்டடங்கள் கூடக் கிடையாது. இந்த நிலைமையில்தான் மாற்றுத் திறனாளிகள் மீது இவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். தாங்கிப்பிடிக்க வேண்டிய அரசே மாற்றுத் திறனாளிகளை காலில் போட்டு மிதிப்பது எந்த வகையில் நியாயம்?" எனக் கொந்தளித்தார்.

No comments:

Post a Comment