FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, November 8, 2016

ஆசிரியர் அடித்ததால் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்!


கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த பிரவீனா என்பவரின் மகனான பிரதாப், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சீருடை அணியாமல் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் பாட்ஷா கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த மாணவர், பின்னர் காது கேட்காதது குறித்து தனது தாய் பிரவினாவிடம் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பிரசோதனை மேற்கொண்டதில், பிரதாப்பின் காது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் காதுகேட்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினா, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment