FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, November 8, 2016

ஆசிரியர் அடித்ததால் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்!


கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த பிரவீனா என்பவரின் மகனான பிரதாப், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சீருடை அணியாமல் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் பாட்ஷா கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த மாணவர், பின்னர் காது கேட்காதது குறித்து தனது தாய் பிரவினாவிடம் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பிரசோதனை மேற்கொண்டதில், பிரதாப்பின் காது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் காதுகேட்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினா, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment