FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, November 8, 2016

ஆசிரியர் அடித்ததால் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்!


கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த பிரவீனா என்பவரின் மகனான பிரதாப், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சீருடை அணியாமல் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் பாட்ஷா கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த மாணவர், பின்னர் காது கேட்காதது குறித்து தனது தாய் பிரவினாவிடம் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பிரசோதனை மேற்கொண்டதில், பிரதாப்பின் காது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் காதுகேட்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினா, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment