FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, November 8, 2016

ஆசிரியர் அடித்ததால் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்!


கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த பிரவீனா என்பவரின் மகனான பிரதாப், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சீருடை அணியாமல் கடந்த 3ம் தேதி பள்ளிக்கு சென்ற பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் பாட்ஷா கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த மாணவர், பின்னர் காது கேட்காதது குறித்து தனது தாய் பிரவினாவிடம் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் பிரசோதனை மேற்கொண்டதில், பிரதாப்பின் காது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 சதவிகிதம் காதுகேட்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவினா, தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment