FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 27, 2016

எங்களாலும் சாதிக்க முடியும்..!' அசத்திய சென்னை காதுகேளாதோர் மாணவிகள்




மாற்றுத் திறனாளி மாணவிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அரசு உதவி பெறும் சென்னை பள்ளி மாணவிகள் பரிசுகளை அள்ளினர்.

காதுகேளாதோர் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் சார்பில் 4வது தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து காதுகேளாத மாணவிகள் பங்கேற்றனர். 12 வயதுக்குள் கீழ், சப்-ஜூனியர், ஜூனியர் (பெண்கள்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ரேஷ்மா, ஷீமாராணி, திருவேணி, ஜோதிகுமாரி ஆகிய மாணவிகள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவி திருவேணி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், மாணவி ஜோதிகுமாரி, 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசையையும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை சித்ரா லட்சுமி பயிற்சியாளராக இருந்தார்.

சப்-ஜூனியர் பிரிவினருக்கான குண்டு எறிதல் போட்டியில் மாணவி ரஹிட்டா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே மாணவி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா 2ம் இடத்தைப் பிடித்தார். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசை பெற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஆஷா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஆசிரியை ராகேல் ரூபா இருந்தார்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் மணிபாரதி, பத்மா, பொன்னி, பாரதி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் மாணவி தமிழ் பிரியா இரண்டாம் பரிசை பெற்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஜெஸிந்தா ரோஸ்லிண்டு இருந்தார்.

மாணவிகளை சென்னையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லிண்டு, ஆசிரியைகள் சி.ஆர்.சரஸ்வதி, கவிதா மற்றும் ஜான்ஸி ராணி, கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸிலிண்டு கூறுகையில், "எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சிகள் மூலம் இத்தகைய பரிசுகளை பெற முடிந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் பரிசுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு போட்டிகளைத் தவிர அனைத்திலும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment