FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, November 27, 2016

எங்களாலும் சாதிக்க முடியும்..!' அசத்திய சென்னை காதுகேளாதோர் மாணவிகள்




மாற்றுத் திறனாளி மாணவிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அரசு உதவி பெறும் சென்னை பள்ளி மாணவிகள் பரிசுகளை அள்ளினர்.

காதுகேளாதோர் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் சார்பில் 4வது தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து காதுகேளாத மாணவிகள் பங்கேற்றனர். 12 வயதுக்குள் கீழ், சப்-ஜூனியர், ஜூனியர் (பெண்கள்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ரேஷ்மா, ஷீமாராணி, திருவேணி, ஜோதிகுமாரி ஆகிய மாணவிகள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவி திருவேணி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், மாணவி ஜோதிகுமாரி, 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசையையும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை சித்ரா லட்சுமி பயிற்சியாளராக இருந்தார்.

சப்-ஜூனியர் பிரிவினருக்கான குண்டு எறிதல் போட்டியில் மாணவி ரஹிட்டா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே மாணவி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா 2ம் இடத்தைப் பிடித்தார். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசை பெற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஆஷா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஆசிரியை ராகேல் ரூபா இருந்தார்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் மணிபாரதி, பத்மா, பொன்னி, பாரதி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் மாணவி தமிழ் பிரியா இரண்டாம் பரிசை பெற்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஜெஸிந்தா ரோஸ்லிண்டு இருந்தார்.

மாணவிகளை சென்னையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லிண்டு, ஆசிரியைகள் சி.ஆர்.சரஸ்வதி, கவிதா மற்றும் ஜான்ஸி ராணி, கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸிலிண்டு கூறுகையில், "எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சிகள் மூலம் இத்தகைய பரிசுகளை பெற முடிந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் பரிசுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு போட்டிகளைத் தவிர அனைத்திலும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment