FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, November 27, 2016

எங்களாலும் சாதிக்க முடியும்..!' அசத்திய சென்னை காதுகேளாதோர் மாணவிகள்




மாற்றுத் திறனாளி மாணவிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அரசு உதவி பெறும் சென்னை பள்ளி மாணவிகள் பரிசுகளை அள்ளினர்.

காதுகேளாதோர் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் சார்பில் 4வது தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து காதுகேளாத மாணவிகள் பங்கேற்றனர். 12 வயதுக்குள் கீழ், சப்-ஜூனியர், ஜூனியர் (பெண்கள்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ரேஷ்மா, ஷீமாராணி, திருவேணி, ஜோதிகுமாரி ஆகிய மாணவிகள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவி திருவேணி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், மாணவி ஜோதிகுமாரி, 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசையையும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை சித்ரா லட்சுமி பயிற்சியாளராக இருந்தார்.

சப்-ஜூனியர் பிரிவினருக்கான குண்டு எறிதல் போட்டியில் மாணவி ரஹிட்டா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே மாணவி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா 2ம் இடத்தைப் பிடித்தார். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசை பெற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஆஷா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஆசிரியை ராகேல் ரூபா இருந்தார்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் மணிபாரதி, பத்மா, பொன்னி, பாரதி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் மாணவி தமிழ் பிரியா இரண்டாம் பரிசை பெற்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஜெஸிந்தா ரோஸ்லிண்டு இருந்தார்.

மாணவிகளை சென்னையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லிண்டு, ஆசிரியைகள் சி.ஆர்.சரஸ்வதி, கவிதா மற்றும் ஜான்ஸி ராணி, கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸிலிண்டு கூறுகையில், "எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சிகள் மூலம் இத்தகைய பரிசுகளை பெற முடிந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் பரிசுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு போட்டிகளைத் தவிர அனைத்திலும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment