FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 27, 2016

எங்களாலும் சாதிக்க முடியும்..!' அசத்திய சென்னை காதுகேளாதோர் மாணவிகள்




மாற்றுத் திறனாளி மாணவிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அரசு உதவி பெறும் சென்னை பள்ளி மாணவிகள் பரிசுகளை அள்ளினர்.

காதுகேளாதோர் அகில இந்திய விளையாட்டு கவுன்சில் சார்பில் 4வது தேசிய ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் உள்பட 15 மாநிலங்களிலிருந்து காதுகேளாத மாணவிகள் பங்கேற்றனர். 12 வயதுக்குள் கீழ், சப்-ஜூனியர், ஜூனியர் (பெண்கள்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 17 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட தொடர் ஓட்டப் பந்தய போட்டியில் ரேஷ்மா, ஷீமாராணி, திருவேணி, ஜோதிகுமாரி ஆகிய மாணவிகள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். மாணவி திருவேணி 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், மாணவி ஜோதிகுமாரி, 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசையையும் பெற்றனர். இந்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை சித்ரா லட்சுமி பயிற்சியாளராக இருந்தார்.

சப்-ஜூனியர் பிரிவினருக்கான குண்டு எறிதல் போட்டியில் மாணவி ரஹிட்டா மூன்றாவது இடத்தை பிடித்தார். அதே மாணவி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா 2ம் இடத்தைப் பிடித்தார். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசை பெற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி ஆஷா, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஆசிரியை ராகேல் ரூபா இருந்தார்.

ஜூனியர் பிரிவுக்கான போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் மணிபாரதி, பத்மா, பொன்னி, பாரதி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சௌமியா மூன்றாம் இடத்தைப் பிடித்தார். வட்டு எறிதல் போட்டியில் மாணவி தமிழ் பிரியா இரண்டாம் பரிசை பெற்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த மாணவிகளுக்கு பயிற்சியாளராக ஜெஸிந்தா ரோஸ்லிண்டு இருந்தார்.

மாணவிகளை சென்னையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லிண்டு, ஆசிரியைகள் சி.ஆர்.சரஸ்வதி, கவிதா மற்றும் ஜான்ஸி ராணி, கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸிலிண்டு கூறுகையில், "எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட விளையாட்டு பயிற்சிகள் மூலம் இத்தகைய பரிசுகளை பெற முடிந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளும் பரிசுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு போட்டிகளைத் தவிர அனைத்திலும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment